Author: Prime Reporter
டிரெண்டிங் இசையமைப்பாளர் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இந்தியா முழுவதும் இவரது இசைக்கு ரசிகர்கள் உண்டு. 3 படத்தில் தொடங்கிய பயணம், ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான் என பான் இந்தியா இசையமைப்பாளராக உருவாகியுள்ளளார். கோடியாக கோடியாக சம்பளம் வாங்கினாலும் சந்தோஷம் இல்லை என அனிருத் பேசியுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சிறு வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும் போது ரூ.500 கொடுப்பார்கள். அதில் இருக்கும் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, சில நிகழ்ச்சிகளில் சம்பளம் தராமல், வெற்றிலை பாக்குடன் முடித்துவிடுவர். ஆனால் இப்போது கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும், சிறு வயது சந்தோஷம் இப்போது இல்லை என ஓபனாக பேசியுள்ளார்.
பல படங்களில் குத்தாட்டம் போடவே ஒரு பாடலுக்கு நடித்து வந்த நடிகை தற்போது படுத்த படுக்கையாகி உள்ளார். நடிகை முமைத்கான, என் பேரு மீனாகுமாரி பாடலில் செம ஆட்டத்தை போட்டிருப்பார். அந்த பாட்டுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் நெருப்பே பாடலுக்கு ஆடி பலரது கவனங்களை ஈர்த்த அவர், தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கமிட் ஆனார். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதை வாடிக்கையாக கொண்ட முமைத்கான், எப்பேர்ப்பட்ட நடனத்தையும் அசால்டாக ஆடி விடுவார். போக்கிரி படத்தில் என் செல்ல பேரு, வில்லு படத்தில் டாடி மம்மி என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மலையூர் மம்பட்டியான், மருதமலை போன்ற படங்களல் கௌரவ தோற்றங்களில் நடித்தார். பல வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சில வருடங்களுக்கு…
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழகம் சார்பில் பாகம் முகவர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் சதீஷ் தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேடையில் ஒவ்வொரு நிர்வாகியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பாளர் தா மாரி பேச தொடங்கினார். “எனக்கு கோபம் கோபமாக வருகிறது. நான் கட்சிக்காக மூன்று முறை சிறை சென்று உள்ளேன். அதில் பத்திரிக்கையாளர்களை அடித்து விட்டு சிறை சென்று இருக்கிறேன். நான் மறுபடியும் சொல்கிறேன் எனக்கு கோபம் வருகிறது. பத்திரிக்கையாளர்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.. வீடு புகுந்து உங்களை அடிக்க வேண்டியது வரும் கண்டிப்பாக அது நடக்கும்” எனக் கூறிவிட்டு வணக்கத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
புதுப்படங்கள் ரிலீசாவதற்கு இணையாக ரீரிலீஸ் படங்களுக்கும் மவுசு அதிகம்தான். இப்போதைய சினிமா வரலாற்றில் எல்லா படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுப்பதால், கில்லி, மங்காத்தா, படையப்பா, சச்சின் போன்ற படங்கள் மீண்டும் திரையில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களை குதூகலிக்கும் விதமாக முத்தான மூன்று படங்கள் மீண்டும் திரைக்கு வர உள்ளது. அதில் மௌனம் பேசியதே மற்றும் மின்னலே படம் ரீரிலீஸ் ஆவது தெரிந்த விஷயம் என்றாலும், 3வதாக காதலர் தினம் படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த வருட காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டும் என நம்பலாம்.
தற்போதைய காலத்தில் வரும் காதல் படங்கள் சற்று வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அப்படி காதல் கதையில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் வித் லவ். புதுமுக இயக்குநர் மதன் இந்த படத்தை இயக்க, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்தார். மேலும் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனம் வந்ததால், நாளுக்கு நாள் வசூலும் கூடி வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் இதுவரை 12.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,.
டிஎன்பிஎஸ்சி சார்பில் நேற்று நடக்கவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 28க்குள் இணையத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 2க்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாளையம் அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் இடையே போட்டி நடந்தன. முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்தன. இதையடுத்து 104 என்ற எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர் பிரையன் பென்னட், சிறப்பாக விளையாடி 48 ரன்களை எடுத்தார். மருமானி 21 ரன்கள் எடுக்க, பிரண்டன் டெய்லர் 31 ரன்கள் எடுத்தார். 13.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக TEAM B அணியில் உள்ள 5 நாடுகளில் 2 புள்ளிகளை பெற்று ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. இலங்கை, 2வது இடத்திலும், அயர்லாந்து,…
காதல், அதிரடி படங்களை கொடுத்து வந்த கவுதம் வாசுதேவ் மேனன் புதிய பாதையை தேர்வு செய்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார் கவுதம் மேனன். திரைத்துறையில் 25 ஆண்டுகளை கவுதம் மேனன் நிறைவு செய்துள்ளார். தொடர்ச்சியாக நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பிஸியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்ததாக ஒரு புத்தம் புதிய கதையை கொண்டு படத்தை இயக்க உள்ளார்,. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், அடுத்த படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்க உள்ளேன். பெரிய ஹீரோக்கள் காதல் கதைகளில் நடிக்க தயாராக இல்லாததால், நான் இளம் நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். புதிய நடிகர் ஒருவரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளேன், நானும் சிம்பு கூட நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் ஆக்ஷன் குறைவு என்பதால், வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்தோம். இப்போது GENZ காதல் வித்தியாசமானது…
தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் இரண்டு மகளிர் அணி மாநாடு கோவை மண்டலத்திற்கும் தஞ்சை மண்டலத்திற்கும் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. இளைஞரணி மாநாடு விருதுநகரிலும் திருவண்ணாமலையிலும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்குப் பிறகு தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதற்கு பின்பு மாநில மாநாடு நடைபெறும். இதற்குப் பின்பு இளைஞர் அணி மகளிர் அணி மாநாடு இருக்காது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியவில்லை. வேறு யாருக்கும் பேசக்கூடிய வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சி தலைவரே கூட இல்லை பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பயப்படக்கூடிய சூழ்நிலை அவர்களுடைய ஆட்சியிலே இருக்கு என்று அவர்களே சொல்கிறார்கள். நிச்சயமாக பிரதமர் இப்படிப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவோட வெளிநாடுகளோடு செய்யப்படும்போது அமைச்சர்கள் நாடாளுமன்றம் நடந்து கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அதைப்பற்றி விளக்கமாக தெரிவிக்க வேண்டும் அதுதான் மரபு.…
சட்டக்கல்லூரியில் வகுப்புக்குள் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு சட்டக் கல்லூரியில் இன்று காலை அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. ஏராளமான மாணவர்கள் பயிலும் அந்தக் கல்லூரியில், காலை 9.15 மணியளவில் வகுப்பறையில் இருந்த பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், திடீரென எழுந்து துப்பாக்கியை எடுத்து, பின்னால் அமர்ந்திருந்த சக மாணவி சந்தீப் கவுர் மீது சுட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் வகுப்பறையில் இருந்த மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடினர். இதன் பின்னர், பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை முடித்துக் கொண்டார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார்…
