Author: Prime Reporter

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் அச்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது என்னையும் கைது செய்யுங்கள் என சீமான் வேனில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் சீமானையும் கைது செய்தனர், பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Read More

பச்சை பட்டாணி முகமூடி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது முகப்பரு கரும்புள்ளி குறைத்து இயற்கையான ஈரப்பதத்தை வழங்கி மென்மையான தோலை தருகிறது

Read More

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்றும், திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், மக்கள் முடிவு செய்வார்கள்.. கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.. 2006ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் செய்த தவறு என பதிவிட்டுள்ளார்.

Read More

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 12% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு அதில் திமுக வெல்லும் என வெளியாகியுள்ளது. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் மெத்தனமாக இந்த கட்சி இருக்காது, தொடர்ந்து உழைத்து கொண்டே இருப்போம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் ஒத்துவராது, திமுக காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். இதில் எந்த குழப்பமும் இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். எனக்கு ராகுல் காந்தி சகோதரரை போன்றவர், அவருக்கும் அப்படித்தான். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைத்து வரும் திமுக…

Read More

ஜெயம் ரவி ஆர்த்தி மற்றும் கெனிஷா தொடர்பான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Read More

நடிகை தபு தனது தந்தையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் குழந்தை பருவ நினைவுகள் மற்றும் குடும்ப அனுபவங்கள் குறித்து உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்

Read More

டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில 11வது லீக் ஆட்டத்தில் யுஏஇ – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பேட்டிங் செய்தது. 20 ஓவரில் யுஏஇ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இறங்கியது. தொடக்க வீரர்களாக சைஃபர்ட் மற்றும் ஆலன் இறங்கினர். யுஏஇ பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறி அடித்தனர். யுஏஇ அணியால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறினர். முடிவில் 15.2 ஓவரில் 175 ரன்கள் என்ற இலக்கை சுலபமாக அடைந்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, சைஃபர்ட் மற்றும் ஆலன் இணைந்து 175 ரன்கள் எடுத்தது அதிக பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்துள்ளது.

Read More

தமிழ் சினிமாவில் மிரட்டும் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். 90களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றியவர். தற்போது அவரின் நிலைமை பரிதாபம்தான். வீல் சேரில்தான் அவர் உலா வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில வீல் சேரில் அமர்ந்தபடியே அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ டிரெண்டானது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் அரசியல் குறித்து பேசினார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மாற்றம் வர வேண்டும் என நினைக்காலம், அது விஜய்யாக இருந்தாலும் சரி. மேலும் மற்ற நடிகர்கள் எனக்கு உதவியது போல, விஜய் எனக்கு உதவி செய்யவில்லை. அதற்காக அவரை நான் கெட்டவன் என சொல்லவில்லை என பொன்னம்பலம் கூறினார்.

Read More

ஆட்டோவில் பயணம் செய்வது சிலருக்கு அலாதியான இன்பம் என்றே சொல்லலாம். ஒரு சில ஓட்டுநர்கள் பயணிகளை நன்கு மதிப்பர். ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்கள் வாகனங்களை அலங்கரித்து பயணிகளை கவருவர். ஆனால் தனது ஆட்டோவில் சிறுமியை உறங்க வைத்து சவாரி செய்து வருகிறார் ஓட்டுநர் ஒருவர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆட்டோவில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ பின் இருக்கையில் சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கார். உடனே ஓட்டுநர் சிறுமியை பற்றி கேட்க, ஓட்டுநர் சொன்ன வார்த்தை நெகிழ வைத்துள்ளது. ஓட்டுநர் கூறியது, அது என் மகள் ஆயுஷி, என் மனைவி இறந்துவிட்டதால், மகளை தனியாக கவனித்து வருகிறேன். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத சூழல் உள்ளதால், தினமும் சவாரிக்கு செல்லும் போது, மகளை பின் இருக்கையில் அமர்த்திவிடுவேன். View this post on Instagram A post shared by…

Read More

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். கோவையிலேயே பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களை குடி நோயாளிகளாக மாற்றி விட்டதாகவும், தமிழ்நாடு அரசே மதுவிற்கு அடிமையாகி விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் நெருங்குவதால் பார் லைசென்ஸ்கள் வழங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி திரட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். முதல்வர் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஜெபம் செய்வதாக கூறுவதாக…

Read More