Author: Prime Reporter
கோவை பகுதியில் சிறுத்தையா அல்லது பூனையா என்ற குழப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது; பொதுமக்கள் அச்சத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
சூலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டதால் பகுதி பரபரப்பாகியது; போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
வெள்ளலூரில் நிலத்தடி நீர் மஞ்சளாக மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்; காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது; போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நுழைந்த நாய் ஒன்று வாலிபரின் உடலை சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் நாகசாலா பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பீமேஸ்வர் (32), கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்கிறேன் என குடும்பத்தினரிடம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பீமேஸ்வர் உயிரிழந்த நிலையில் மிதந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு புகுந்த நாய் ஒன்று உடலை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோ…
ஆப்பிள் iPhone 17e புதிய அம்சங்கள், மேம்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சிப், இந்திய விலை விவரங்கள் குறித்து முழு தகவல்கள் வெளியாகின.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித்…
தேசிய பாஜக மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4,000க்கும் அதிகமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். The Week ஆங்கில வார இதழ் சார்பில் இன்று (2.3.2026) நடந்த நிகழ்ச்சியிலும் இதைத் தெரிவித்திருக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் பணத்திலோ, திமுக அரசின் பணத்திலோ எந்த ஹிந்து கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. ஹிந்து பக்தர்களின் பணத்திலும், கோவில் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்தும் தான் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதிக வருமானம் வரும் கோவில்களில் மட்டும்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. வருவாய் இல்லாத கோவில்களில் திருப்பணிகள் செய்ய உள்ளூர் மக்கள், பக்தர்கள் முயற்சி எடுத்தால், அதற்கு அனுமதி கொடுக்க திமுக…
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு நுழைந்துள்ள இந்த நேரத்தில் விஜய் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுவும் சங்கீதா சொன்ன காரணங்கள்தான் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த நிலையில் விஜய் மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் திட்டி, ஆபாசமாக பேசி நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். தவெக தொண்டர்கள் சிலரும் இதில், சங்கீதா குறித்து விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், சங்கீதா குறித்து அவதூறு பரப்பும் தவெக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய விஜய்க்கு அனைத்திந்திய தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில்,…
தாய் கிழவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் அதிரிபுதிரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கிய திரைப்படம் தாய் கிழவி. ட்ரெய்லரே மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். படமும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய படங்கள் இல்லாத நிலையில் தாய் கிழவி 50 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என கூறப்படுகிறது. தாய் கிழவி படத்துக்கு போட்டியாக வெளியான விஜய்யின் ரீ ரிலீஸான் தெறி படமும், சரத்குமாரி ஆழி திரைப்படமும், ஆரியின் FOURTH FLOOR படங்கள் செம அடி வாங்கியுள்ளன. தாய் கிழவி படம் 3 நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டியளள்தாக சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெறும் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், ரூ.50 கோடி வசூலை தாண்டும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும்…
