Author: Prime Reporter
கொல்கத்தா: நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தைப் பார்த்த எந்தவொரு கிரிக்கெட் ரசிகருக்கும், இவ்வளவு சீக்கிரம் ஒரு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி முடியும் என்று துளியும் தோன்றியிருக்காது. ஆமாங்க, இந்த டி20 உலகக்கோப்பை 2026 நியூஸிலாந்து வெற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையே மிரள வைத்துள்ளது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை மிகச் சாதாரணமாக, ஒரு பயிற்சி ஆட்டத்தைப் போல 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளது நியூஸிலாந்து அணி. திணறிய தென்னாப்பிரிக்கா: 169/8 என சுருண்டது எப்படி? முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான மற்றும் நெருக்கடி கொடுக்கும் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பவர் பிளே ஓவர்களிலேயே ரன் குவிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரொம்பவே…
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள், மாணவர்கள் தவிப்பு. மக்களைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்வாகத்தில், ‘வருவாய்த்துறை’ என்பது மக்களோடு நேரடியாக தொடர்பில் உள்ள துறை. அதுவும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார் போன்றவர்கள் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால், கிராம…
நடிகை ராதிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக பொருந்துவார். பொருத்தத்தை விட அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். பாரதிராஜாவின் மெட்டீரியல் என்றால் சும்மா இல்லை, திறமைசாலியான நடிகர்களாகத்தான் இருப்பர் என்பதற்கு ராதிகா சிறந்த உதாரணம். கிழக்கே போகும் ரயில் முதல் தற்போது தாய் கிழவி வரை அவர் காட்டும் நடிப்பு வித்தியாசம், அவர் தந்தை எம்ஆர் ராதாவையே மிஞ்சும் அளவுக் உள்ளது. தாய் கிழவி படத்தில் மிரட்டலான லுக்கும், மாஸான பேச்சும் பெண் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இதனிடையே தாய் கிழவி சூப்பர் ஹிட் ஆனதும் தொடர்ந்து ஊடகங்கள் அவரிடம் பல பேட்டிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், யூடியூபில் உள்ள ஒரு சேனலுக்கு பேட்டியளித்த ராதிகா, நடிகைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் நானும் நடித்து வருகிறேன். அதில் மமிதா பைஜூவை பார்த்தேன், அனைத்தையும் அசால்ட்டாக செய்து வருகிறார். அவர் ஒரு…
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் அரசியல் மட்டுமல்லாமல், உணர்ச்சி பூர்வ தருணங்களாலும் கவனம் பெற்றது. கட்சித் தலைவர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வரும் நிலையில், தஞ்சை பகுதி ரசிகர்கள் எடுத்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விஜய் மற்றும் அவரது மனைவி Sangeetha Sornalingam இடையிலான விவாகரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக கூறப்படும் சூழலில், இன்றைய கூட்டத்தில் சில ரசிகர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்துடன் பங்கேற்றனர். அந்த போஸ்டர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, பெரும் பேசுபொருளாக மாறியது. தலைவரின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் தீர்ந்து, இருவரும் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடனும் ஆதங்கத்துடனும் ரசிகர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்துக்கான புகைப்படங்கள் தற்போது எக்ஸ் (X) மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் எளிமையாகச் செய்வது எப்படி? குழந்தைகளும் விரும்பி உண்ணும் பாரம்பரிய ஸ்வீட் ரெசிபி இதோ உங்களுக்காக.
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட Southern Railway-யின் திருச்சிராப்பள்ளி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவுவாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயரிடப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “கர்தவ்ய த்வார்” என்பதற்கு தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” எனப் பொருள் கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு இந்தியில் பெயரிடப்பட்டிருப்பது மொழி திணிப்பாக கருதப்படுவதாக பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு M. K. Stalin மற்றும் Edappadi K. Palaniswami உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டனர். தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில், எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து திருச்சி மண்டல ரெயில்வே மேலாளர் அலுவலக நுழைவுவாயிலில் தமிழில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த இந்திப் பெயர் அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாய் கிரிசல்ட்டா தொடர்ந்த தந்தைவழி உரிமை வழக்கில், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ (DNA) பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாகப் பேசிய பெண் ரசிகைகளை “அறிவுக்கொழுந்துகளே” என அழைத்து, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை சிப் மூலம் கட்டுப்படுத்தும் ‘சைபோர்க்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இவை இனி உளவு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
போர் மேகங்கள் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்த ‘லப்பர் பந்து’ பட நடிகை சுவாசிகா, பாதுகாப்பாக நாடு திரும்பிய பிறகு தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உருக்கமான பேட்டியளித்துள்ளார்.
