Author: Prime Reporter
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது; தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த வாரத்தில் படம் திரைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு”. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் பின்னணி பணிகள் நடைபெறும் போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக ஆர்.ஜே. பாலாஜி திட்டத்தில் இருந்து விலகியதாகவும் சமூக…
விஜய் – சங்கீதா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், சங்கீதாவிற்கு ஆதரவாக திருநங்கை எழுத்தாளர் தனுஜா குரல் கொடுத்துள்ளார்; விஜய் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நாங்குநேரி சம்பவம் போல் அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூர் மேலத்தெருவில் ஆதி திராவிட மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அந்த பேருந்து நிறுத்தம் வழியாக அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு சென்ற கும்பல் ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த கும்பல் ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படும் நபர்கள் அனைவரையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் தெருவில் நின்றிருந்த பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டதுடன் இதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் படுகாயமடைந்ததுடன்…
நடிகர் அஜித்தின் கார் பந்தயப் பயணம் குறித்த ஆவணப்படம் திரைப்படமாக வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கோவையில் 4-வது திருமணம் செய்ய இருந்த பெண்ணுடனான கள்ளக்காதல் தகராறில், ஹோட்டல் அதிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும். இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தி.மு.க. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 இடங்களில் தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், மற்றொரு இடத்தில் பா.ம.க.வும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், பா.ம.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
எதிர்நீச்சல் சீரியலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்த தொடரின் இரண்டாம் பாகம் சன்டிவில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதி குணசேகரன் என்ற திமிர் பிடித்த குடும்பத்திடம் மருமகளாக வரும் பெண்கள், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை கடந்து எதிர்நீச்சல் போட்டு வருகின்றனர். அந்த தொடரில் நடித்தவர் நடிகை கனிகா. மலையாள வரவாக சினிமாவில் நுழைந்த அவருக்கு குறைவான வாய்ப்புகளே அமைந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் அவருக்கு இன்னொரு இன்னிங்ஸ் கிடைத்துள்ளது. இதனிடையே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் சில மாதங்களாக சீரியலில் வரவே இல்லை. போதாக்குறைக்கு ஆதி குணசேகரன் தாக்கி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல காட்சி அமைந்திருந்தது. அதன் பின் அவரை காமிக்கவே இல்லாமலும், மருத்துவமனையில் இருந்து அடிக்கடி ஃபோன் செய்து மருத்துவர்கள், செவிலியர்கள் பேசுவது போல காட்சி வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். காரணம், அவர் மகன்…
கோவையில் பேருந்து பயணத்தின் போது தொழிலாளியின் பையில் ஃபெவிக்விக் ஊற்றி, ஜிப்பை ஒட்டி ₹5.20 லட்சம் திருடப்பட்ட நூதனச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலத்திலும் திடீரென ஏற்பட்ட கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
