Author: Prime Reporter
34 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சூர்யா என்பவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியான ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் தனிமையில் இருந்த 34 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வீட்டுக்குள் போலீசார் சீருடையில் காவலர் சூர்யா அத்துமீறி நடந்துள்ளார். போதையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய காவலரான சூர்யா என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண்மணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுதற்போது விசாரணையில் இருந்த காவலர் சூர்யா ஒழுங்கினத்தில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் திரிஷா குறித்து ஏராளமான விமர்சனங்கள் வரும் நிலையில் நேற்று மாலை இருவரும் தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவுக்கு ஜோடியாக வந்தது பேசு பொருளானது. இந்த நிலையில் இன்று திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் அழகாக இருக்கீங்க குந்தவை என வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஒரு பக்கம் திரிஷா மீது விமர்சனம் விழுந்தாலும், அவர் இந்த பதிவை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் பிறந்தநாளுக்கு தான் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருகிறார் திரிஷா. அண்மையில் கூட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் – திரிஷா குறித்து பேசியதற்கு, திரிஷா தனது சொந்த விஷயங்களை அரசியலாக்க வேண்டாம் என கூறியிருந்தார். View this post on Instagram A post shared by…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், 4 மருமகள்களின் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க வந்த 4 பெண்களின் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் விடாமல் இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர். முதல் பாகம் முடிவுற்று, எதிர்நீச்சல் தொடர்கிறது என 2வது பாகமும் சூடுபிடித்து போனது. ஆனால் என்னதான் ஆதி குணசேகரனுக்கு எதிராக போராடினாலும் அவரே அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவது இல்லத்தரசிகளே அலுத்து போகும் அளவுக்கு இருந்தது. இதனிடையே தான், மீண்டும் ஆதிகுணசேகரனுக்கு ஜெயில், ஜனனி கர்ப்பம் என அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்தது. இந்த நிலையில் தனது சொத்தை எல்லாம், தனது தம்பி கதிர் மற்றும் ஞானத்திற்கு எழுதி வைத்துவிடுகிறார் ஆதி குணசேகரன். சொத்து மேல் ஆசையுள்ள ஆதி குணசேகரன் எப்படி சொத்தை தனது தம்பிகளுக்கு எழுதி தந்துள்ளார் என யோசிக்கும் ஜனனி, இதில் என்ன ரகசியம் இருக்கிறது என கண்டுபிடித்து வருகிறார். இப்படி இந்த…
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிடடுள்ள அறிக்கையில், ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு…
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெடை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன்போது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அவையில் தெரிவித்தார். முன்னதாக பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. “புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு” என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது. முன்னதாக சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த…
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் சுற்றி தினமும் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் அவர் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படியேறிய நிலையில், விவாதப் பொருளானது. ஆனால் மனுவில் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக அவர் சொன்னதுதான் ஹைலைட். இதனால் விஜய் பற்றிய விமர்சனம், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளானது. இது குறித்து விஜய் எந்த அறிக்கையோ, வாய் திறந்து பேசவோ இல்லை. குறிப்பாக விஜய் மனைவி சங்கீதா குறித்து, விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கு விஜய் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். தனது ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும் என விஜய்க்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்தன. ஆனால் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த நிலையில் நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் இல்லத் திருமண விழாவுக்கு…
விவாகரத்து சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுக்களுக்கு மத்தியில், நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
காஸ்ட்லியான அழகு சாதனப் பொருட்கள் தேவையில்லை! வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, பொலிவான சருமத்தைப் பெறுவது எப்படி? இதோ எளிய டிப்ஸ்.
அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் – குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும்…
சூலூர் அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி பாலமுருகனை, ஆய்வாளர் தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்தார். உதவி ஆய்வாளர் யுவராஜ் காயமடைந்த நிலையில், ரவுடி மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
