Author: Prime Reporter
போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களில் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாமக செயல் தலைவர் அன்புமணி சில யோசனைகளை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு…
அனிருத் அலு அர்ஜுன் படத்திற்காக 20 கோடி சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி, தெலுங்கு சினிமாவில் பரபரப்பு.
நடிகர் மன்சூர் அலிகானின் சமீபத்திய சர்ச்சை மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் தற்போதைய நிலவரங்களை இந்தச் செய்தி தொகுப்பு விளக்குகிறது.
இளைஞர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய தகவல் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குடிமகனின் உயிர் பறிபோவது சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவரின் உயிர் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் பொறுப்பாகும். எனவே, இந்த சம்பவத்தின் உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் உயிரிழப்பின் உண்மை தன்மை வெளிப்படும். சிபிசிஐடி விசாரணையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வரவேற்கிறேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு…
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக ஆட்சியை சரமாரியாக குறை கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், ‘வெற்று விளம்பர மாடல்’ தி.மு.க ஆட்சியில் அச்சமூட்டும் கொலைக்களமாக மாறி இருக்கிறது. நரகத்தில் வாழ்வதைப்போல, தினம்தோறும் மனம் பதைபதைத்து வாழும் கொடுந் துயரத்தில் சிக்கி இருக்கின்றனர் தமிழக மக்கள். பாதுகாப்பான சூழலில், அமைதியாக வாழ வேண்டிய பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயந்து பயந்து… பதைபதைத்து வாழும்போது, ஆளும்கட்சியின் ஆதரவோடு இருக்கும் குற்றவாளிகள் தைரியமாக வலம்வரும் அவலமும் நடக்கிறது. திறனற்ற தி.மு.க அரசாங்கத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்து – சீழ்பிடித்துப் போய் இருக்கிறது என்பதற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற சம்பவங்களையே சாட்சியாகக் காட்டலாம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக்கும்பல்கள் பொதுமக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது; அதில், இரண்டு பேர் பலியானது. சென்னை திரிசூலத்தில்…
திமுக ஆட்சியில் வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் பாலியல் வேட்டைக்கு பலியாகுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,கிருஷ்ணகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவரை கொன்று, அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 60 வயதான மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என ஒரு வாரகாலமாக தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இம்மியளவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது. திறனற்ற நிர்வாகத்தால் திக்கெட்டிலும் கயவர்களை சுதந்திரமாகத் திரியவிட்டு, தினந்தினம் பெண்களையும் குழந்தைகளையும் நரக வேதனையை அனுபவிக்கச் செய்துவிட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்று கூற நாகூசவில்லையா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? பல வீர மங்கைகளை உலகிற்கு ஈந்த தமிழகத்தை, பெண்கள் அஞ்சி…
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வர்ணனையின் போது, சூர்யா நடிப்பில் தான் இயக்கியுள்ள ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து ஆர்.ஜே. பாலாஜி நகைச்சுவையாகப் பேசியது வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் விஜய் நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘லீடர்’ படம் ஏப்ரலில் வெளியாகும்; மார்ச் 21ல் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.
வெளியான 10 நாட்களில் 2026-ன் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக ‘தாய் கிழவி’ சாதனை படைத்துள்ளது.
