Author: Prime Reporter
தெலுங்கு பட விழாவில் “நான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன்” எனப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஆர். பார்த்திபன்; சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் மற்றும் ட்ரோல்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, எனது முன்னிலையில், இன்று மாலை 4 மணிக்கு #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. விடியா திமுக அரசின் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான, சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து, பொதுமக்கள் மற்றும் மகளிருக்கான பாதுகாப்பையும் இளைஞர்களின் நல்லதொரு எதிர்காலத்தையும் உறுதிசெய்யும் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் நம் கழக உடன்பிறப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்…
தவெக சார்பாக தமிழக அரசை கண்டித்து, ஆதவ் அர்ஜூனா பேசும் போது, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர். அவருக்கு அடுத்தபடியாக விஜய் தான் உள்ளார். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து ரஜினி அரசியலை விட்டே விலகினார். ஆனால் விஜய்க்கு வலிமை உள்ளது என பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தது. மேலும் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் ரஜினி திடீர் அறிக்கை வெளியிடடுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜூனா என்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்தை தெரிவிததுள்ளார். அவருடைய கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர் ரகுபதி, நண்பர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி என குறிப்பிடட் ரஜினி, காலம் பேசாது ஆனால்…
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது; பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி
கோவை அவிநாசி மேம்பாலத்தில் மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்ற இருசக்கர வாகன காட்சி வைரலாகி போலீஸ் விசாரணை தீவிரமாகிறது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை
கோவை லுலுமாலில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் வாந்தி எடுத்து பாதிப்பு ஏற்பட்டதால் நிர்வாக அலட்சியத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
கேஸ், எண்ணெய் அல்லது வேகவைக்க வேண்டிய அவசியம் இன்றி, பத்தே நிமிடங்களில் ஆரோக்கியமான மற்றும் சுவையான தக்காளி வெங்காய பச்சடி செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
