Author: Prime Reporter
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் குடும்பத்துக்கு அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சி வயப்பட்டு ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திக்கு மகுடம் சூட்டுவோம்; தமிழை மட்டம் தட்டுவோம் என வஞ்சக நோக்குடன் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் சொல்லிவருவதும் – என தொடர்ச்சியாக இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைத்து வருகிறது பாசிச பாஜக. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்காமல் ஒரே மொழியை திணிப்பது அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள…
மருந்து பாட்டில்களை திறந்த பிறகு எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்? பாராசிட்டமல், இருமல் சிரப் மற்றும் சொட்டு மருந்துகள் குறித்த மருத்துவரின் முக்கிய அறிவுரைகள் இதோ.
13 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய மர்மபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் பான் கிராமத்தில் 13 வயதான 6 ஆம் வகுப்பு சிறுமி மீது கடந்த கட்டாயம் ஒரு அசிட் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. நேற்று மதிய நேரத்தில், பள்ளி முடிந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, சைக்கிளில் பயணிக்கையில், ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர் அவளை நிறுத்தி, வழி கேட்கும் பாசாங்கு செய்தார். சிறுமி தனது சைக்கிளை நிறுத்திய உடனே, அந்த நபர் திடீரென அவளின் முகத்தில் ஆசிட் திரவத்தை வீசிவிட்டார். இச்சம்பவத்தில், அவளின் முகம் தீக்காயங்களுடன் பலமுறை எரிந்தது, மற்றும் சிறுமி கடும் வலியுடன் அலறினாள். அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, அந்தச் சிறுமி தனது தைரியத்தை எடுத்து, அசத்தலாக தனது பள்ளி செல்ல ஓடினாள். பள்ளியில்…
நேபாள சுற்றுலா விபத்தில் உயிரிழந்த பொள்ளாச்சி தம்பதியர் உட்பட மூவர் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சூலூர் அருகே தேர்தல் விதிமுறை மீறி பதுக்கி வைத்த சில்வர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
ஆரோக்கியமான கோதுமை தோசை மற்றும் காரசாரமான தக்காளி சட்னி செய்வது எப்படி என்பதை எளிமையாக வீட்டிலேயே கற்றுக்கொள்ளுங்கள் இன்று.
சட்டமன்ற தேர்தலுக்காக திரள் நிதியை மக்களிடம்பெறப் பேவாதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய…
விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை நயன்தாராவை வைத்து பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு ஆளும்கட்சி உட்பட கூட்டணி கட்சியினரே சி.வி சண்முகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான ஓ.பி ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிககையில், எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, தனது திறமையாலும் கடின உழைப்பால் இன்று ‘சிறந்த நடிகை’ என்ற பெயரை மட்டுமல்லாமல், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் திருமதி.நயன்தாரா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கும் அதிமுக எம்.பி திரு. சி.வி. சண்முகம் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசுவது அரசியல் அல்ல, அது நாகரிகமின்மையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் கண்ணியத்தை காயப்படுத்தும் பேச்சு, பேசுபவரின் குணநலனையே காட்டுகிறது. அரசியல் மேடை என்பது அவமதிப்பு…
விளாத்திக்குளம் அருகே உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தாரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு தமிழக பாஜக சார்பாக நிதியுதவி அளிக்கப்பட்டது. உடன் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. சித்ரங்கதன் அவர்களும் உடனிருந்தனர். திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்குத் தங்களது குலவிளக்கைப் பலி கொடுத்து விட்டு தவிக்கும் அக்குடும்பத்தாரின் கண்ணீர் முகம் என் நெஞ்சில் ஆறா வடுவாக உறுத்துகிறது. குற்றம் நடந்து பல நாட்கள் கடந்து விட்ட போதும்,…
தமிழ் சினிமாவில் இருபதாண்டுகளுக்கும் மேலாக தனது முன்னணி இடத்தை நிலைநிறுத்தி வரும் நடிகை குறித்து பரபரப்பான தகவல் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட உலகில் தொடர்ந்து பயணித்து வரும் திரிஷா, இன்று வரை முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல தலைமுறை ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள அவர், தற்போதும் கதாநாயகி மையப்படுத்திய கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள “கருப்பு” திரைப்படம் மீது ரசிகர்களிடையே ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்தப் படத்தில் பல ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடித்திருப்பது, ரசிகர்களுக்கு ஒரு முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 42 வயதிலும் முன்னணி நடிகையாகத் திகழும் திரிஷா திடீரென சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது அறிமுகம் முதல் இதுவரை சுமார் 75…
