Author: Prime Reporter

மக்கள் திமுக மீது கோபமாக இருப்பதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியை விளாத்திக்குளத்தில் இருந்து விரட்டியதே சாட்சி என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி! இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் திரு. ஸ்டாலின் அவர்களே? காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது இத்தோடு நிற்கப் போவது இல்லை.…

Read More

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற “எஞ்சாய் எஞ்சாமி” பாடலைச் சுற்றிய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை உருவாக்கியதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதைக் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ராப் பாடகர் அறிவு இடையே கடுமையான கருத்து வேறுபாடு வெளிப்படையாகி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்த பாடல், வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. கிராமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த பாடல் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. ஆனால் அதற்குப் பின்னாலேயே படைப்புரிமை மற்றும் அங்கீகாரம் தொடர்பான விவாதங்கள் இருந்ததாக தற்போது வெளிவந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒருவர், “எஞ்சாய் எஞ்சாமி” பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ, ராப் பாடகர் அறிவிடமிருந்து ‘திருடி’ பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், பாடலின் உருவாக்கம் குறித்து விரிவாக விளக்கம்…

Read More

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் போலவே தோற்றம் கொண்ட நபர் ஒருவர், விளம்பரம் ஒன்றில் நடித்து வரும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Read More

கோவை போத்தனூரில் தண்ணீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் சென்ற லாரி சிக்கி பரபரப்பு ஏற்பட்டது.

Read More

பழனி முருகன் கோவிலில் பிரபல நடிகை திடீர் தரிசனம் செய்ய வந்ததால் பக்தர்கள் செல்பி எடுக்க அலைமோதினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு இன்று மதியம் நடிகை அமலாபால் வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப்பாதையில் இருந்து கீழிறங்கினார். கோயில் ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், நடிகை அமலாபாலுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Read More

தளபதி விஜய்யின் ஜனநாயகன் பட OTT ஒப்பந்தம் ரத்து; வெளியீட்டு தாமதம் மற்றும் சென்சர் பிரச்சினைகள் காரணம்.

Read More

ஆழியார் கவியருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது; கம்பி தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

Read More

திருப்பூரில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், வணிக சிலிண்டர்கள் விரைவில் தடையின்றி வழங்கப்படும் என்றும் பாரத் கேஸ் விநியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

திமுகவின் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கி வரும் முதலமைச்சருக்கு, தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் வரும் மார்ச் 15 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ உள்ளரங்கில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அதற்குத் திமுக அரசு அனுமதி மறுத்து, சுவரொட்டி மற்றும் விளம்பரங்களைப் பறிமுதல் செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாங்கள் நடத்தும் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கும் திமுக அரசு, மாற்றுக்கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுத்து முடக்க நினைப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத முகம் மக்கள் முன்பு அம்பலப்பட்டுவிடும் என்ற பயமா? அல்லது, யார் எதிர்க்க முடியும் என்னும் அதிகாரமா?…

Read More