Author: Prime Reporter
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க…’ என்று வலியுறுத்திவிட்டு ஆசிரியர்களே இல்லாமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதலமைச்சர் அவர்களே என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்… அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்… அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா. கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும்…
கோவையை மெருகூட்ட நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் பெருமையை விளக்கும் பிரம்மாண்ட அடையாளச் சிலையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர்.
மாடர்ன் உடையில் நடிகை ஹன்சிகா மோத்வானி எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு.ஸ்டாலின். நீங்கள் அந்த இரண்டு சிறுவர்களிடமும், ரீல்ஸ் போடுவதோடு மட்டுமல்லாமல், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன அறிவுரை, இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை. நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கட்டிடங்கள்…
உடுமலை சிறுவன் மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர்; கல்லீரல், சிறுநீரகம், இதயம் நான்கு பேருக்கு புதிய வாழ்க்கை.
ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படம் தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்து 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் தவெக தலைவர் விஜய், தற்போது என்டிஏ கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது இதுகுறித்து தவெக தரப்பிலோ, என்டிஏ தரப்பிலோ யாரும் அதிகாரப்பூர்வமாகவோ, சூட்சமாகவோ எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் இந்த செய்தி எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் என்டிஏவுடன் கூட்டணி வைக்க தவெக மாவட்ட செயலாளர்கள் பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஒரு சிலர் வேண்டாம் என கூறுவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம்…
கோவையில் 14 வயது சிறுமி குழந்தை திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; 20 நாட்களாக டிஸ்சார்ஜ் இல்லையென குடும்பம் கண்ணீர்.
கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக சிங்காநல்லூர் அருகே உள்ள நீர் கோணம் பாளையம் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக போலீஸ் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து அதில் ஆறு பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் பின்னர் அவர்களை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து அவருடைய தம்பி தங்கை இசக்கி திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ்…
