Author: Prime Reporter
விஜய்யின் எளிமை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் அஜித் இட்லி சமைத்து கொடுத்தது குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் முன்பு பேசிய பழைய கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
விஜய் விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜான் விஜய், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் விவாதிப்பது தவறு என்றார்.
திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ்களில் பணியாற்றக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஏப்ரல் 20 முதல் மே 4 வரை பதற்றமான காலம் இருக்கலாம் என ஜோதிடர்கள் கணிப்பு.
“செத்தாலும் கோழையாக சாகமாட்டேன்” – ரஜினிகாந்தின் பழைய ஆவேசப் பேச்சு மீண்டும் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
66 வயது மூதாட்டியை கூட விட்டு வைக்கல, திமுக ஆட்சியில் தொடரும் அவலம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது. எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,…
அறிவாலயத்தின் உடன்பிறப்புகளைக் கண்டாலே கடும் கோபம் தான் வருது.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு புகார்!
நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவம் எளிதில் கடந்து செல்ல முடியாதது. “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்,…
என்டிஏ உடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு தவெக மறுத்துள்ளது. இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர், தவெக முதன்மை செய்தி தொடர்பாளருமான சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை…
வரும் ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் என பரபரப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்புஎதுவும் வெளியிடவில்லை. ஒரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தவெக அதை மறுத்து வருகிறது. ஆனால் தொடர்ந்து என்டிஏ உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி “உண்மைக்குப் புறம்பான” செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னர்…
