Author: Prime Reporter
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோவை, திருப்பூர் நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிலர் புதிதாக “மஞ்சள் நகரம்” என்று கூறுகிறார்கள். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை ஏற்றிக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை அல்ல; அது ஈகோ பிரச்சனை. இந்த விவகாரத்தில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு. திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுகிறார்கள்; அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக…
திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், குப்பையை தரம் பிரித்து கொட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னகாளிபாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து, குப்பை ஏற்றி வந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தின் போது சாணிப் பவுடருடன் பங்கேற்ற பெண் ஒருவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்களை சமரசப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சின்மயி என்றாலே சர்ச்சை என்று தான் பொருள் போல… அந்தளவுக்கு இவரை சுற்றி சர்ச்சைகள் வெடித்து வருகிறது. நேற்று தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், சிக்கிக கொண்ட அப்படத்தின் நடிகை நிதி அகர்வால், பவுன்சர்கள் உதவியுடன் காரில் புறப்பட்டு சென்றார். கடும் நெரிசலில் வந்த அவரை ரசிகர்கள் அத்துமீறினர், அவரிடம் சீண்டலில் ரசிகர்கள் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், சில ஆண்களின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ள அவர், பெண்களை குறிவைத்து நடைபெறும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டு வருகின்றன. சிலர் சின்மயியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பலர் அவரை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து…
சூலூர் அருகே செல்போன் திருட்டு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி செல்வலட்சுமி புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பரத் (32) என்பவரை, கடந்த 15-ஆம் தேதி இரவு அவரது நண்பர்களான கோகுல், விக்னேஷ் மற்றும் சபரீசன் ஆகியோர் பேச வேண்டும் எனக்கூறி வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் காலை அப்பநாயக்கன்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள காத்திருப்போர் அறையில் பரத் பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் நடத்தி வந்த செல்போன் கடையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரத் வேலை செய்ததும், அங்கிருந்த விலை உயர்ந்த போனை அவர் திருடியதாகக் கூறி வேலையை விட்டு நீக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த ஆத்திரத்தில் இருந்த கோகுல் மற்றும் அவரது நண்பர்கள், சம்பவத்தன்று இரவு பரத்தை…
விஜய் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளதால் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ஜனநாயகன் படம் தான் கடைசி என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இன்று மாலை ஒரு பேரே வரலாறு என்ற பாடல் வெளியாக உள்ளது. இதனிடையே ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 20 நாட்களுக்கும் மேலான காலம் இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் தொடங்கிய முன்பதிவிலேயே இதுவரை ரூ.28 லட்சம் வசூல் ஈட்டப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு முன்பாக மொத்த முன்பதிவு வசூல் எவ்வளவு வரை உயரும் என்பது குறித்து திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களுக்கு கையசைத்த த.வெ.க. தலைவர் விஜயை கண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் விஜய் பேசியதாவது: “ஈரோட்டில் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். இதுவே அரசியல் அல்லவா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அரசியல் இல்லையா, அல்லது சிலர் போல அநாகரிகமாக பேச வேண்டுமா? நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்கள் பணத்தை மக்களுக்கே வழங்குவது இலவசம் அல்ல. மக்கள் பணத்தில் மக்களுக்காக செய்யப்படுவதை இலவசம் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘ஓசி’ என்று கூறி மக்களை அவமதித்தால், அதை தட்டிக்கேட்க நான் வருவேன். மக்களுக்கு ஏதாவது நடந்தால், இந்த விஜய் வந்து நிற்பான்; அவர்களுக்காக கேள்வி…
தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்துள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் விஜய் மகனை வைத்து படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். நடிகை தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன், தற்போது ட்ரோல் மெட்டீரியலாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மகேந்திரன் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையானது. இது குறித்து அவர் விளக்கமளித்தாலும், விளம்பரத்திற்காக ராஜகுமாரன் இவ்வாறு செய்வதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். தேவயானி தன்னுடன் வரும் போது வெறும் கையை மட்டுமே வீசி வந்ததாக தனது சொந்த மனைவியை விமர்சித்திருந்தார். பட வாய்ப்பில்லாத ராஜகுமாரன், தன்னை விளம்பரப்படுத்த இப்படி செய்கிறாரா என தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியில், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் விஜய் மகன் ஜேசன் தான் ஹீரோ, எனது மகள் இனியா தான்…
பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை நிதி அகர்வால். இவர் சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். பின்னர் உதயநிதியுடன் கலகத் தலைவன் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தது. தற்போது பிரபாஸ் உடன் ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், நிதி அகர்வால், தமன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு தடுப்புகளை மீறி ரசிகர்கள் அளவுகடந்து குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. What a shame ! pic.twitter.com/cnzkMfZkaB— Prashanth Rangaswamy (@itisprashanth) December 17, 2025 நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நிதி அகர்வாலை ரசிகர்கள் வளைத்துவிட்டனர். சிலர் நிதி அகர்வாலிடம்…
சன் டிவியின் டிஆர்பி ரேட்டை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சீரியல்களில் சிங்கப்பெண்யே சீரியலுக்கு தனியிடம் உண்டு. ஆரம்பம் முதல் தற்போது வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் ஆனந்தி, அன்பு கதாபாத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் அன்பு கதாபாத்திரத்தில் நடிப்பவர் அமல். இவர் இந்த சீரியலுக்கு முன் அம்மன் என்ற சீரியலில் நடித்ரிதருந்தார். சீரியலில் நடிக்கும் முன் வாய்ப்பில்லாமல் கேட்டரிங் சர்வீஸ் வேலை எல்லாம் பார்த்து, சினிமாவுக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடைய தான் அவருக்கு அம்மன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்த நடிகை பவித்ராவை காதலித்த தொடங்கினார். பவித்ரா தற்போது விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் நடித்து வருகிறார். அமல் மலையாளத்தில் நடித்தாலும், சிங்கப்பெண்ணே சீரியல் மூலம் பிரபலமானார். அம்மன் சீரியல் முடிந்ததும் வாய்ப்பில்லாமல் இருந்த அவருக்கு சிங்கப்பெண்ணே பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆனாலும், அம்மன் சீரியலில் நடித்த நடிகை பவித்ராவை…
