Author: Prime Reporter

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீப ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூரணச்சந்திரன் ஆத்மா சாந்தியடைய வேண்டி பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு தீப ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழக அரசியல் வரலாற்றில் இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்காகவும், சுதந்திர போராட்டத்திற்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள் ஆனால் முதல்முறையாக இந்துக்கள், முருக பக்தர்கள் தங்களது கோரிக்கைக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிப்பதாக கூறினார். த.வெ.க தலைவர் விஜய் கொங்கு மண்டலம் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவிற்கும் த.வெ.க.விற்கு தான் போட்டி என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி…

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். தற்போது முன்னணி நடிகராக உள்ள அவர், ஏற்கனவே தனது எஸ்கே ப்ரொடக்சன் நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட படங்கள் தரமான படங்களாக அமைந்தன. கடைசியாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். Our journey is built on stories.And defined by the voices behind them.Across our films, we’ve had the privilege of introducing new filmmakers -who found their first steps, their first frames & their first journeys with us.A new chapter unfolds soon -…

Read More

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக உள்ளார். சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ் உடன் கோவை ஈஷா மையத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற சமந்தா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டதால், நெரிசலில் சிக்கிய சமந்தாவை பாதுகாவலர்கள் படாதபாடு பட்டு காரில் ஏற்றி விட்டனர். சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்று திரும்பும் போது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. Apudu Niddhi,ipudu Samantha!Entra idhi pic.twitter.com/XdKH3GB72F— Aryan (@Pokeamole_) December 21, 2025 நடிகை நிதி அகர்வாலிடம் தவறாக நடந்து கெண்டவர்கள் மீது நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே நடிகை சமந்தாவும் கூட்ட நெரிசலில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா கூட்ட…

Read More

கோவையில் ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் சேலை அணிந்துநோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல் சேலை அணிவதன் பெருமை குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுதும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

Read More

இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலை அணிவது, பெண்களின் மரியாதை, அழகு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பாக திகழ்வது என்பதை கூறும் வகையில்,ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் சேலை அணியும்” என்ற அபூர்வமான உலக சாதனை நிகழ்வு கோவையில் நடைபெற்றது… ஜெய்’ஸ் ப்ரைடல் ஸ்டுடியோ மற்றம் அகாடமி சார்பில் நடைபெற்ற இதில் கல்லூரி மாணவிகள்,இளம் வயது பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தொடர்ந்து ஒரு நிமிடத்தில் அனைவரும் இணைந்து மிக வேகமாக நேர்த்தியாக அழகாக புடவை கட்டி அசத்தியதோடு நடனம் ஆடி அசத்தினர்.. பல்வேறு வண்ணங்களில் ஆன புடவைகளை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒரு நிமிட அவகாசத்தில் அணிந்த இந்நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.. இது குறித்து புடவைகள் அணிவதற்கான பயிற்சி வழங்கி வரும் மாஸ்டர் ஜெயந்தி கூறுகையில்,தற்போது இந்திய பெண்களிடையே புடவை அணியும் கலாச்சாரம் குறைந்து வருவதாக தெரிவித்த அவர்,ஆனால் வெளிநாடுகளில்…

Read More

அவிநாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் விருப்ப மனு வழங்கினார் இவர் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்

Read More

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. இதுகுறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ஷுப்மான் கில் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படவில்லை என சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்தார். அணியின் ஒருங்கிணைப்பு தேவைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றும், இது கில்லின் ஃபார்முடன் தொடர்புடையது அல்ல என்றும் அவர் கூறினார். கில்லின் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை; அவர் ஒரு சிறந்த வீரர் என்றும் சூர்யகுமார் வலியுறுத்தினார். அணியின் சமநிலைக்காக ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அணிக்குள் நெகிழ்வுத்தன்மையை உருவாக்க பல விருப்பங்களை திறந்து வைத்திருப்பது அவசியம்…

Read More

உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தனியாா் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா தொடங்கியது.நீலகிரியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நீலகிரி தேன், மலை நெல்லிக்காய், நீலகிரி தேநீர், குறிஞ்சி மூலிகை கல் உப்பு, நீலகிரி மிளகு, நீலகிரி வன காளான் ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அவா்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினா். தொடா்ந்து நூற்றாண்டைக் கடந்தும் ஆங்கிலேயா்களின் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயா்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம்மேட் சாக்லேட் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உதகையில் உள்ள மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் உள்ள தனியார் சாக்லேட் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா இன்று தொடங்கியது. இந்தாண்டு தி கிராண்ட் சாக்லேட் எக்ஸ்ட்ராவாகன்சா 2025…

Read More

வரும் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதே சமயம் இன்பன் உதயநிதி பேனரில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் முன்கூட்டியே ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதை வலைப்பேச்சு அந்தணன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் படத்தின் வசூலை சீர்குலைக்கவே சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட உள்ளனர். இருநடிகர்கள் படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை, சிவகார்த்திகேயன் ரஜினியுடன் நடிக்க விரும்பினார். ஆனால் ரஜினி மறுத்தார். அஜித்துடன் நடிக்க பிளான் போட்டார், குட் பேட் அக்லி அல்லது விடாமுயற்சியில் நடிக்க முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ஆனால் கோட் படத்தில் சிவா நடிக்க விஜய் ஓகே சொன்னார். இப்படியிருக்க ஜனநாயகன்…

Read More

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பேசும்போது : கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மகளிர் மாநாட்டில் ஐம்பதாயிரம் மகளிர் பயன்பட இருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள அதில் எவரேனும் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தகுதியானவர்களாக இருப்பின் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான பணிகளை முன்னெடுத்து உள்ளோம்.கோயம்புத்தூரில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் ? இன்று தான் அரசியல் கட்சியினிடம் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை பார்த்த பிறகு தான் தெரிய வரும். குடியிருப்பு மாறியவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உடைய பெயர்களை நீக்காமல் இருந்து இருக்கலாம். இந்த பட்டியலை பார்த்து பிறகு தான் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கப்படும். தி.மு.க வின் கள்ள…

Read More