Author: Prime Reporter
ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ,ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர்,…
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரகப் பகுதியில் இன்று (02.01.2026) அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்காரா வனபகுதி, மாயார் சாலை அருகே உள்ள மணி வொர்க் ஷாப் அருகிலுள்ள குழும வீடுகள் பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் (50), தந்தை குமார், இன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் தனியாக தேநீர் கடைக்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மணிகண்டனின் உடல் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு (GH) கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனை (Postmortem) மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறை சார்பில் உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவு அடைந்து விடுமுறை நாள் என்பதால் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்நிலையில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 104 சவரன் தங்க நகை ரூபாய் 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து கோயமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தற்பொழுது கோவை சங்கனூர், கண்ணப்பன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை மட்டும் நோட்டம் விட்டு வீட்டில் குடியிருப்பவர்கள் வெளியூர் சென்ற நேரங்களில் கண்காணித்து இரவு நேரங்களில் வீட்டில் கள்ளச்…
சின்ன பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது சல்லியர்கள். வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தை கிட்டு என்பவர் இயக்கியுள்ளார். சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருந்தனர். ஆனாதல் போதுமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்காததால் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது குறித்து PVR சினிமாஸ் குரூப்பை நேரடியாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது. வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.ஆனாலுய்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்டவிரோத கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே புதிய இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அதிவேகமாக தப்பி சென்றனர் அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது அதில் கால் கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர். விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லரை விற்பனையில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து கோம்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (19) ஹரிஷ் (20) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய புதிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கேட்பதற்கு யாரும் இல்லாத புள்ளிங்கோ ஸ்டைலில் செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது…
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது பொய்யான தகவல். ‘முழு பூசணியை சோற்றில் மறைப்பது’ என்ற பழமொழியைக்கூட விடாமல், தி.மு.க. அரசு ‘முழு பாறாங்கல்லையே சோற்றில் மறைக்க’ முயற்சிக்கிறது. இவ்வாறு மக்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற முடியும் என்பதே கேள்வி; தி.மு.க. அரசு விரைவில் தூக்கி எறியப்படும் என்றார். மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தின் போது சம்பவ இடத்திற்குச் செல்லாத முதலமைச்சர், தேர்தல் நேரங்களில் மட்டும் அங்கு செல்வது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் புகைப்படப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் விமர்சித்தார். அதேபோல், திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில், பெரிய அளவிலான பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, Armed Force டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு.ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு. Armed Force DGP யாக நியமனம் .ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி.,யாக நியமனம் .ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம். சிபிசிஐடி ஐஜி அன்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம். ஆவடி கமிஷனர் சங்கர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் மாற்றம்.தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல்…
கோவையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள் அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கரும்புக்கடை ஆசாத் நகர், ஐந்தாவது வீதியில் விடுமுறை தினம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மூன்று சிறுவர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாமல் அதிவேகமாக வந்தனர்.மேலும் வேகத்தை குறைக்காமல், வந்து அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் மீது மோதிய வேகத்தில் வாகனத்தை நிறுத்த முடியாமல் சிறிது தூரம் சென்று நிறுத்தினர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் நடந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த…
இந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஏற்கனவே பிரபல நடிகரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அவர், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சினிமாவில் இருந்து சில காலம் பிரேக் எடுத்துக் கொண்ட அவர், தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனிடையே இயக்குநர் ராஜ் நிடிமோருடன் கோவை ஈஷா மையத்தில் திருமணமும் செய்தார். சமீபத்தில் மாமியார், மாமனாருடன் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. இதைத்தொடர்ந்து கணவருடன் தற்போது போர்ச்சுகல் நாட்டுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளார். View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl) அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பலரும் வாழ்த்துக்களை சமந்தா தம்பதியினருக்கு கூறி வருகின்றனர்.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த போதை ஆசாமி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போதையில் இருந்த வாலிபர் தான் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திடீர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாரை ஆக்ரோஷமாக தாக்க முயற்சி செய்துள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த காவலர் ராமகிருஷ்ணன் தன்னை தற்காத்து கொள்ள தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கொண்டு தடுக்கவே அருகே இருந்த மற்ற காவலர்கள் போதை ஆசாமியை மடக்கி பிடித்து கத்தியை பிடிங்கினர். அதனை தொடர்ந்து போதையில் இருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம்…
