Author: Prime Reporter
கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய கடை திறப்பு விழாவில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
Ranveer Singh – Aditya Dhar கூட்டணியில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானபோது எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதனால் அதன் தொடர்ச்சியாக உருவான துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப் உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே பேசுபொருளாக மாறியது.கதை, காட்சிகள், அரசியல் பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களில் கலவையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும், வசூல் வேகத்தில் எந்த வித தளர்வும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் வசூல் சாதனைகளை பதித்த Pushpa 2 படத்தின் பல முக்கிய ரெக்கார்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து, துரந்தர் 2 தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இது பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் இந்தப் படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. https://utvprime.in/2026/03/25/without-causing-any-rift-in-the-friendship-the-gentleman-praised-kamal-as-his-brother-with-great-courtesy-250326/ இந்நிலையில், வெளியான 6…
தேர்தல் பறக்கும் படையினரின் பணப் பறிமுதலைக் கண்டித்து மார்ச் 31-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும் என விக்ரமராஜா கோவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
கோவை சூலூர் அருகே நள்ளிரவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குச்சிகளை நட்டு இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதே போல திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ‘…
முதுமலையில் இருந்து கோவை சாடிவயல் முகாமிற்கு 38 ஆண்டு காலப் பெண் யானை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது; வனத்துறையினர் இதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கோவையில் சாலையில் கிடந்த ரூ. 9,500 மற்றும் ஆவணங்கள் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 4-ம் வகுப்பு மாணவி ஜான்விக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை ஆலாந்துறையில் ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேஸ் லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
