Author: Prime Reporter

நடிகர் விஜய் தீவிர அரசியல்வாதியாக மாறியுள்ளார். அரசியலில் முழுநேரமும் குதித்துள்ளதால் தனது சினிமா கேரியரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள அவர் தனது ஜனநாயகன் படம்தான் கடைசி என அறிவித்துள்ளார். தவெக கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். 2026 தேர்தல் தான் இலக்கு என களப்பணியாற்றி, தேர்தல் மாநாடு நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் சில நேரங்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் பரிந்துரைத்தும், இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை…

Read More

கோவை: விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்த அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்து, ஊர்வலமாக அவரை அழைத்து சென்று ஆர்பரித்தனர். நிகழ்வில் கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், விவசாய அணி மகாலிங்கம், மதுக்கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு, மாவீரர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, விழாவில் கலந்து கொண்டவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக புறாக்களையும் பறக்கவிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெருமை சேர்த்தனர். மக்கள் மற்றும் தொண்டர்கள் இருவரும் இணைந்து ஈச்சனாரி பகுதியை உற்சாகமாக நிரப்பினர். விழாவில், நிர்வாகிகள் வேணுகோபால், ஜெயக்குமார், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும்,…

Read More

தங்கம் விலை சமீப நாட்களாக விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வந்தது. திடீரென இந்த வாரம் தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் விலை இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று காலை 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,160க்கும் விற்பனையானது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது, மாலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,600க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து 1,00,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கும் ஒரு கிலோ ரூ.2.57 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. போக்கு காட்டி வரும் தங்கம் விலை நிலவரம் சாமானிய மக்களுக்கு எட்டாகனியாக மாறி வருகிறது.

Read More

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் திடீரென நடந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ராஜகோபுரத்தின் மீது ஏறிய ஒருவர் தங்கக் கலசத்தை சேதப்படுத்தியதால், கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. கீழே இறங்க மறுத்த அந்த நபர், “மது வாங்கித் தராவிட்டால் இறங்க மாட்டேன்” என கூறி முரண்டு பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருப்பதி போலீஸார், சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குடிபோதையில் இருந்த அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.

Read More

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் த.வெ.க கொங்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று மேட்டுப்பாளையம் வந்திருந்தார். இந்நிலையில் அதில் ஒரு நிகழ்ச்சியாக பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக தகவல் வந்தது. இந்நிலையில் உரிய முன் அனுமதி பெறவில்லை என்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அண்ணா சிலையை சுற்றியுள்ள கம்பி க் கூண்டிற்கு பூட்டு போட்டு பூட்டப்பட்டது. இதை அடுத்து செங்கோட்டையன் பூட்டப்பட்ட அண்ணா சிலைக்கு முன்பாக இருந்து உரையாற்றினார். அப்பொழுது அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சியும் ஆட்சியும் நடத்தும் இரண்டு கட்சிகளுமே அண்ணாவை தாங்கி பிடிக்க மறுக்கிறார்கள். ஆனால் எங்களது த.வெ.க தொண்டர்கள் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி பிடித்து உள்ளார்கள் என்று கூறினார். மேலும் ஒரு திரைப்படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கும் விஜய் நான்கு படங்களை கணக்கிட்டால் ரூபாய் ஆயிரம்…

Read More

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கடந்த 07.12.25. அன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோசப் அலி சஜிதா பேகம் இவருடைய மகன் சைபுல் அலாம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை தூக்கிச் சென்று தாக்கியதால் உயரிழந்தான். இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியை சிறுத்தை அடிக்கடி உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. இதனை வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து முன்னோட்டம் பார்க்கப்பட்டது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடிகளால் உயிர் சேதம் அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தற்போது கூண்டு வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.…

Read More

2026 சட்டசபை தேர்தல் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பரபரப்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக-பாஜக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் வெல்வார்கள் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர். 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் எடுக்கப்பட்ட முடிவு வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் படி முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும், முதலமைச்சர் வேட்பாளர்களுக்கான கருத்து கணிப்பில் விஜய் 2வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முந்தி விஜய் 2வது இடத்திற்கு வந்துள்ளார் என்பது ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த கருத்துகணிப்பு நகரங்களில் 54.8 சதவிகிதமும், மீதி இடங்களில் 45.2 சதவிதிகதமும் எடுக்கப்பட்டுள்ளது. 21 வயது முதல் 30 வயதினர் உடையவர்கள் 25.6…

Read More

பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாக்குவாதம், மோதல், சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் விஜய் சேதுபதி எவிக்சன் பிராசஸ் அறிவிப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் கம்ருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் விழுகின்றன. காரணம் நேற்று நடந்த கார் டாஸ்கில், சாண்ட்ராவை கேவலமான வார்த்தைகளால், கம்ருதீன் மற்றும் பார்வதி பேசியது, சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து தள்ளிவிட்டது போன்றவை காரணமாக உள்ளது. கடைசி வரை காரில் இருப்பவர்கள் டிக்கெட் டூ ஃபைனலை வெல்வார்கள் என்பதால், போட்டியாளர்களிடையே மோதல் இருந்தது. அதே சமயம் ஒருவர் ஒருவரை தள்ளி இழுத்து, மோதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. காருக்குள் இருந்த…

Read More

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவரது மனைவி கலையரசி (33). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மூன்று மகன்கள் உள்ளனர். கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி உணவு உண்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை 7 மணியை கடந்தும் கலையரசி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. எழுப்பிப் பார்த்தபோதும் அசைவின்றி கிடந்ததை கண்டு, கருணாகரன் இதுகுறித்து தனது மனைவியின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கலையரசியின் பெற்றோர், அவர் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த…

Read More

கோவையில் கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரன், தவசி (எ) குணா ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் நடைமுறை விபரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதனையடுத்து, மேலதிக விசாரணைக்காக வழக்கை வரும் ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Read More