Author: Prime Reporter
நாகர்கோவில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தமிழகஅரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக – பாஜககூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில், அங்கு நிலவும் அரசியல் சூழல்ஒரு குடும்பப் போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பாஜகவின் கோட்டை நாகர்கோவில்: நாகர்கோவில் தொகுதி நீண்டகாலமாக பாஜகவின் பலமான கோட்டையாகக்கருதப்படுகிறது. தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகபாஜகவைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார். இருப்பினும், தேர்தல் கூட்டணிஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தொகுதியை அதிமுக-விற்கு ஒதுக்க இருகட்சிகளும் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலிஜாவுக்கு சீட் கிடைக்குமா? ஒருவேளை நாகர்கோவில் தொகுதி அதிமுக-விற்கு ஒதுக்கப்பட்டால், அங்குஅதிமுக சார்பில் ஸ்ரீலிஜா வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், அது அவரது குடும்பத்திற்குள்ளேயேஒரு அரசியல் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. களமிறங்கும் அண்ணன் நாஞ்சில் சிவராம்: ஸ்ரீலிஜாவின் சகோதரர் நாஞ்சில் சிவராம் தற்போது பாஜகவில் இணைந்துசெயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னதாக அவர் விஜய் ரசிகர் மன்றத்தின்மாவட்டப் பொறுப்பிலும்,…
யூத் படம் வெளியான ஆறு நாட்களில் நல்ல வசூல் ஈட்டி சிறிய படமாக இருந்தும் பெரிய வெற்றி நோக்கில் நகர்கிறது.
ரஜினிகாந்தின் ‘பாபா’ பட தோல்விக்குப் பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
நடிகை ராதிகா நடிப்பில் வெற்றி நடைபோடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் மார்ச் 26 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனைகட்டி வனப்பகுதியில் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்த 56 வயது நபர் உயிரிழப்பு; ஒரு வாரத்திற்குப் பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு.
Chinna Marumagal என்ற தொடர், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் Swetha. இந்த நிலையில், ஸ்வேதாவின் கணவர் என கூறப்படும் Aadhi சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பேட்டியில், தாங்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் ஸ்வேதாவின் பெற்றோர் அந்த உறவை ஏற்காததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த வழக்கு தொடர்பான காரணத்தைக் காட்டி தான் ஸ்வேதாவின் குடும்பம் தன்னை நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, ஸ்வேதா தன்னிடம் கொண்டிருந்த காதலால் தான் திருமணம் நடைபெற்றதாகவும், இந்த திருமணம் குறித்து மிகவும் குறைந்த பேருக்கே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவாக இருவரும் வெளியில் சேர்ந்து வராததற்குக் காரணம், தனது காரணமாக ஸ்வேதாவின் நடிப்பு வாழ்க்கையில்…
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் சிறுமியின் உயிர் பறிபோனதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிலிண்டர் தட்டுப்பாடு.. பாஜக அரசு என்ன செய்கிறது? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி! திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால், பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறையினர், வருவாய்த்துறையினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வராத கொடூரமும் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? மொத்தத்தில், பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு நீதியை…
கோவை பெரியநாயக்கன்பாளையம் தனியார் பள்ளி விடுதியில் விறகு உடைக்க மரத்தில் ஏறிய 12-ம் வகுப்பு மாணவர் நந்தகுமார் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.
வளைகுடா நாடுகளின் போரால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு சமீப நாட்களாக ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறினாலும், சிலிண்டர் புக் செய்து ஒரு மாதமாகியும் இன்னும் வராத நிலையில் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது. யாருமே நெருங்க முடியாது… வசூலில் பிரம்மாண்டம் காட்டிய துரந்தர் 2! பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய கடை திறப்பு விழாவில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
