Author: Prime Reporter
கோவை சாய்பாபா காலனி பகுதியில், தனியார் மகளிர் கல்லூரியில் பாஜக வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் முழக்கங்களை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சுற்றுப்புற சூழல், கார்பன் நியூட்டலுக்காக இன்று வாக்கத்தான் நடைபெற்றது என்றார். கார்பன் நியூட்டன் கோவைக்கு வெர்ச்சுவல் மரம் நடவு எனப்படும் செல்போனை குறிப்பிட்ட நேரம் சுவிட்ச் ஆப் செய்து கார்பன் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் 92 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இணைந்ததாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சுற்றுப்புற சூழல்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 களைகட்டி வருகிறது. 95 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசனில் இந்த முறை 6 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் உள்ளனர். இன்னும் 5 நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரப் போகிறது. இதில் கானா வினோத் தான் வெற்றியாளர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், பணப் பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இறுதியாக உள்ள சபரி, அரோரா, விக்ரம், சாண்ட்ரா, திவ்யா என 5 பேரில் யார் வெற்றியாளர் என்பதை காண இன்றும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். கானா வினோத்துக்கு அதிக ஆதரவு இருந்தும் அவர் ஏன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் பொருளாதார ரீதியாக சபரி மற்றும் சாண்ட்ரா உள்ளதால், வினோத் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கானா வினோத் எடுத்து சென்ற பணம் ரூ.18…
திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஏசுதாஸ்(45).இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கை முதல் குற்றாவவாளியாக தொடர்புடைய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏசுதாஸ் பிணையில் வெளியே வந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் காரில் நத்தம் சாலையில் RMTC நகர் அருகே ஏசுதாஸ் வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரண மேற்கொண்டு இருந்தபோது ஏசுதாஸ் இரண்டாவது மனைவியான தீபிகா என்பவரை வீட்டின் முன்வைத்து கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பித்து சென்றுள்ளனர். உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவியை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இரண்டு கொலைகளை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. குறிப்பாக நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று நடந்த விசாரணையில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து ஜனநாயகன் படம் வரும் 11 அல்லது 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்ததால் படம் வெளியாவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபெரிய…
TTV தினகரனுக்கும் இடமில்லை – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே தாங்கள்தான் தலைமை வகிப்பதாகவும், வருங்காலத்திலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும் உறுதியாகக் கூறினார். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது அமைக்கப்படும் ஒன்றே என்றும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் திமுகவும் ஒரு காலத்தில் இருந்ததாகவும், அதேபோல் அதிமுகவும் இருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டினார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார். எனவே குறை சொல்லுவதற்கு எந்த காரணமும் இல்லாத நிலையில், ஏதாவது காரணத்தை தேடி முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.அதிமுக ஆட்சி குறை சொல்ல முடியாத, சிறப்பான ஆட்சி என குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் ஏதேனும் குறை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தமிழக கட்சி கழகம் வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் வைகைச்செல்வன் தங்களைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வைகைச் செல்வனுக்கு சீட்டும் தரவில்லை அவர் ஜெயிக்கவும் இல்லை அதனால் அவருக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் யார் யாருக்கு கருத்து சொல்ல வேண்டும் என தகுதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் பல பேர் இணைய போவதாகவும் அதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்து சென்றார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் அறிமுகமாக மதராஸி வரை பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நாளை வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பராசக்தி படத்திற்கான பிரமோஷன் பட்டையை கிளப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும், குடும்பத்தோடு செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித், மாதவன் போன்ற நடிகர்கள் துபாயில் வீடு வாங்கியுள்ள நிலையில், அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் ஜனநாயகன் படம் தான் கடைசி என அறிவித்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில், சாதகமான தீர்ப்பு வராததால் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்தது. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் அரசியல் நுழைவே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. விஜய்யின் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட உள்ளதால் தான், இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக பரவலான கருத்துக்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் மெர்சல் பட ரிலீசின் போதே பிரச்சனை ஏற்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம், அது போலவே தற்போது ஜனநாயகனுக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.…
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. கடைசி படம் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ரிலீஸ் தேதி அறிவித்த பின், வியாபாரம் படுஜோராக போனது. ஆனால் திடீரென சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் போனது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம், படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை. இதனால் படத்தின் ரீலிசை தள்ளிப்போடுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ஜனநாயகன் ப்ரீ புக்கிங் செய்தவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் எனவும் கூறப்படுகிறது. கடைசி ஒருமுறை விஜய்யை திரையில் பார்க்கலாம் என தளபதியின் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். தற்போது படம் ரிலீஸ் தள்ளிப்போனது மிகப்பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் ஜனநாயகன் ரூ.65 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நாளை படம் ரிலீஸ் ஆகாது என்பதால் இனி வசூல் எப்படி இருக்கும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்த விமல் ராஜ் மற்றும் அவருடன் பணிபுரியும் நண்பர்களான முரளி மற்றும் ஆகாஷ் காரில் திருமலையாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது தனியார் இரும்பு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் இருந்த இரும்பு குழாயில் கார் அதிவேகமாக வந்து மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காரை ஓட்டிய ஆகாஷ் மற்றும் காரின் பின்னால் இருந்த முரளி ஆகியோர் காரில் இருந்து இறங்கி தப்பினர். இடது பக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் வெளியே வர முடியாமல் தீப்பிடித்த காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
