Author: Prime Reporter

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிர்காக்கும் மருத்துவமனைகளைக் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த ஆதி என்ற இளைஞரை, தலைக்கவசம் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகப்பேறு பிரிவுக்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்தக் கொலையை செய்த கூலிப்படையினரை காவல்துறையினரால் இது வரை கைது செய்ய முடியவில்லை. கொலை செய்யப்பட்ட ஆதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணி கொண்டவர்கள் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அவர் கூலிப்படையினரால்…

Read More

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் முத்து கருப்பு என்பவரின் மனைவி ரிஃபானா (24). கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஸ்பீக்கர் வாங்க முடிவு செய்த ரிஃபானா, அதற்காக தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சபிக் மற்றும் ரியாஸ் ஆகியோர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிஃபானா வீடு திரும்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபிக், ரியாஸ் மற்றும் அவர்களது நண்பர்கள் ஹரி, பாசில், வெற்றி ஆகியோர் ரிஃபானாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதில், ஐந்து பேரும் ரிஃபானாவையும் அவரது தந்தையையும் தாக்கியதாக…

Read More

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதி வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பிடி ஆஷா, படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது விசாரணயில், இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதனால் ஜனநாயகன் மீண்டும் தள்ளிப்போனது. இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதால்…

Read More

கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கியிருந்த 10 சைபர் மோசடி நபர்களை கைது செய்து, ரூ.16.49 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் மோசடி வழக்கை முறியடித்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி RTO CHALLAN அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ஒரு APK அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய அவர் அந்த ஆப்பை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு செயல்பட முடியாத நிலையில் மாறியுள்ளது. அடுத்த நாளில் தொடர்ந்து OTPகள் வந்த நிலையில், அவரது IndusInd வங்கிக் கணக்கில் வைத்திருந்த Fixed Deposit தொகை எடுத்துக்கொள்ளப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. வங்கியை அணுகி சரிபார்த்தபோது, ரூ.16,49,961 ஆன்லைன் மூலம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர…

Read More

தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உள்ள விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இன்று டெல்லியில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் விஜய். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், விஜய் குறித்து சரமாரி விமர்சனம் செய்துள்ளார். அரசியலில் இன்னும் LKG பயிலும் நிலைமையில் உள்ள நடிகர் விஜய், பனையூரின் வரம்புகளைத் தாண்டி பரந்த அரசியல் வெளியில் கால்பதிக்க வேண்டியுள்ளது. அரசியல் என்பது மேடைகளில் உரையாற்றுவதற்கான இடமல்ல; மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் திடமான நிலைப்பாடு எடுக்க வேண்டிய தளம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. அதேபோல், மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியாக…

Read More

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியானது பராசக்தி. ஜிவி இசையமைப்பில் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், தணிக்கை சான்றிதழ் பெற தாமதாமானாலும் இறுதியில் திட்டமிட்டபடி வெளியானது. இந்த நிலையில் முதல் நாளான இன்று பல பிரபலங்கள் படத்தை காண தியேட்டரில் குவிந்தனர். சிவகார்த்தகியேன், ஸ்ரீலீலா, சுதா கொங்கரா, கெனிஷா உள்ளிட்ட பிரபலங்களும் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும், ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்களை வைத்துள்ளதால் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகை ஷாலினி அஜித்குமார், படம் நன்றாக வந்துள்ளது. நான் என்ஜாய் செய்தேன் என கூறியுள்ளார்.

Read More

இளம் வயதிலேயே சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வந்த டிடி பலரது ரசிகர்களை கவர்ந்தார். சிறு சிறு படங்களில் நடித்த அவர், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். எத்தனை தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடிக்கு என்று தனி சிறப்பு தான். தற்போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது. பொது வாழ்க்கையில் பிரபலமான டிடியின் தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் கசப்பானதுதான். முதல் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே கணவரை பிரிந்த அவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் டிடி, தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளதால் உடனே டிரெண்டானது. யாருக்கு திருமணம் என்று பார்த்தால் அவருடைய சகோதரர் தர்ஷனுக்கு நடந்துள்ளது. வெளிநாட்டு பெண்ணான அஜர் என்பவரும் அவரது…

Read More

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நைனார் நாகேந்திரன், முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பெருவாரியான இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாக கூறினார். முகமது கஜினி 17 முறை படையெடுத்து கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்தார். வரக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் அமைச்சர்கள் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகளே பதில் அளிக்கும் என்றார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும் என நம்பிக்கை தெரிவித்த நைனார் நாகேந்திரன், எத்தனை…

Read More

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட உக்கடம் கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி 7வது வீதி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் இன்று (10.012026) துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். நோயின்றி நலமுடன் வாழ குழந்தைகள், முதியோர்கள். பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக, மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம். இன்னுயில் காக்கும் 48 என்ற சாலை விபத்திற்கான சிறப்பு திட்டம். முதலமைச்சரின் விரிவாக காப்பீட்டு திட்டம். இதயம் காப்போம். சிறுநீரகம் காப்போம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பாதம் காப்போம்…

Read More

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதியான நேற்று வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. நீதிமன்றமும் படத்தை வெளியிட தடை விதித்துள்ளதால், தணிக்கை வாரியத்தின் வாதம் பொறுத்தே வரும் திங்கட்கிழமை முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கே வெங்கட்நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் மாதமே படத்த தணிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்து மீண்டும் சமர்பித்தோம். யுஏ சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்து கொண்டிருந்த போது…

Read More