Author: Prime Reporter
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “த..தா. (தந்தையும் தாயும்)” என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அசோகா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருமான வரித்துறை உதவி ஆணையர் ஜெயபிரகாஷ் மற்றும் திரைப்பட நடிகர் செல்லா கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துறை தலைவர் ஜோன் அந்தோணி ராஜா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். யோகநாதன் அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்த “த..தா. (தந்தையும் தாயும்)” குறும்படத்தில் நடிகர் செல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு, மனிதனுக்கும் கன்றுக்குட்டிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை அடிப்படையாக வைத்து மனித உணர்வுகள், உறவுகளின் ஆழம் மற்றும் சமூக பார்வையை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது.…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக அரசின் உரிய உரிமம் இல்லாமல் இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனை அடுத்து உரிய அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாததலும் இன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர், தலமலை, கேர்மாளம் பகுதியில் உள்ள 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர் தலைமையில் ஊராட்சி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஆசனூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் தை 1 பிறக்க உள்ளதால் பொதுமக்கள் கொண்டாட தயாராக உள்ளனர். இந்த நிலையில் வருடா வருடம், பொங்கல் விடுமுறையில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடை வசூல் அதிகமாகும். அதே போல இந்த முறையும் விடுமுறையை கொண்டாட மதுப்பிரியர்கள் மதுவை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதனிடையே கோவை டாஸ்மாக் மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின்…
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது. காரில் 2 பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக் கொண்டன. இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்புலன்ஸ் ரோட்டில் இருந்து அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்ததை பார்த்த பொதுமக்கள் பேட்ரோல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் வரைந்து சென்று காயம் அடைந்து போராடியவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியானது பராசக்தி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து வரலாற்று கதையை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. படம் வெளியாகும் நேரத்தில் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை ஏற்பட்டு ஒரு சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. இறுதியில் சொன்ன தேதியில் படம் வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் படம் திராவிடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், வரலாற்றை மாற்றி எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோலோவாக களமிறங்கிய பராசக்தி படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.51 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் வெறும் ரூ.27 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் படம் ரூ.100 கோடியை விரைவில் தாண்டும் என்றாலும் படத்தின் பட்ஜெட், ரூ.150 கோடி…
ரத்தினபுரியில் ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது கத்தி, பைக் பறிமுதல் ரத்தினபுரி பகுதியில் ஜவுளி வியாபாரியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவானந்தா காலனி, டாடாபாத் முதல் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று, 100 அடி ரோடு, ராஜு நாயுடு தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். “இந்த ஏரியா ரவுடி நான், எனக்கு பல வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் மாமுல் தர வேண்டும்” என கூறி மிரட்டி, லோகேஸ்வரனின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ரூ.2,000 பணத்தை பறித்துள்ளார். இதனால் லோகேஸ்வரன் சத்தமிட்டதும், பொதுமக்கள் திரண்டனர். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றார். இதுகுறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று டிஆர்பி ரேட்டில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து வருகிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசமும், திருமணம் செய்வது போல் நடித்து நிஜ மருமகளாக நுழைந்த நிலாவுக்கும் நடக்கும் கதையே இந்த அய்யனார் துணை சீரியல். ஆண்கள் மட்டுமே உள்ள வீட்டில் நுழைந்த நிலா, எப்படி அந்த வீட்டையும், அவர்களின் மனதை மாற்றுகிறார் என்பதே கதை. இடையில் கணவரின் அண்ணன் காதல், தம்பியின் காதல் என ஜாலியாக செல்கிறது இந்த சீரியல். இதில் கணவன் சோழன் மீது ஆசைப்படும் கல்லூரி மாணவியாக வருகிறார் காயத்ரி. கணவரை கண்டுகொள்ளாத நிலாவை காயத்ரியை வைத்து காய் நகர்த்தும் சோழன். இப்படி கதை நகர்ந்து கொண்டு இருக்க, காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆயிஷா, அதே சீரியலில் நடிக்கும் சல்மானுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.…
திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். யார் எது வேண்டுமானாலும் கேட்கலாம். முடிவு முதலமைச்சர் கையில் உள்ளது. பொங்கல் பரிசு தொகை கொடுப்பதால் விவசாயத்திற்கு புதிய கடன் வழங்க முடியாது அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு? அண்ணாமலை அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.நிதி நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியைப் போல் குளறுபடி கிடையாது. அனைத்து திட்டங்கள் மூலமும் அரசின் வருவாய் உயர்த்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். நிதி…
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். அதிமுக தற்போது வேட்பாளர் தேர்வு செய்து விருப்ப மனு வாங்கி, நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ராஜபாளையம் தொகுதியை கேட்டு விருப்பமனு அளித்துள்ளார் நடிகை கவுதமி. விருப்பமனு அளித்து இபிஎஸ் உடன் நேர்காணலில் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களோடு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளோடு நெருக்கமாகவே பயணித்து வருகிறேன். அந்த நம்பிக்கையில்தான் அங்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன். வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை” என திடமான நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலுக்கு யாரும் வரலாம். ஆனால் அதிமுக வாக்கு வங்கியை விஜய் ஒருபோதும் கைப்பற்ற முடியாது” என்று கடுமையாக பதிலளித்தார். விஜயின் அரசியல் பயணம் இன்னும்…
தென்னிந்தியாவில் பொங்கல், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான புதிய படங்கள் அந்தந்த மொழிகளில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தெலுங்கில் வெளியான படம் தான் மான ஷங்கரா வரப் பிரசாத் காரு. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானி இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு தியேட்டரில் டிக்கெட் எடுத்து பார்த்தனர். ஐதராபாத்தில் உள்ள Kukatpally என்ற பகுதியில் உள்ள அர்ஜூன் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் திடீரென உயிரிழந்துள்ளார். ஆனந்தகுமார் என்ற அந்த நபர்,தியேட்டரில் படம் பார்த்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
