Author: Prime Reporter
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் விஜய்யின் தவெகவில் இணைந்த அவருக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. தவெக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்தார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தவெகவில் அதிருப்தியுடன் இருப்பதாகவும், வேறு கட்சிக்கு தாவலமா என்ற யோசனையில் உள்ளதாக பிரபல செய்தித்தாளில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்து தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்யைடன் அதிரடியாக மறுத்ததுடன், பிரபல செய்தித்தாள் குறித்து விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (73) என்பவரின் மகள் மோகனப்பிரியா (34), கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகனப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். பின்னர் விஜயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயனும் முன்பு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது. இருவரும் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், மோகனப்பிரியா ஐடி நிறுவனத்திலும், விஜயன் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கர்ப்பம் காரணமாக மோகனப்பிரியா பெங்களூரிலிருந்து கணவரின் ஊரான கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகருக்கு வந்து, வீட்டிலிருந்தபடியே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதன் பின்னர் மனஅழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி…
இயக்குநர் அட்லீ ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பயங்கர ஹிட் அடித்தது. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பும், ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்த்தது. பின்னர், தனது ஆஸ்தான நடிகரான விஜய்யை வைத்து, தெறி படம் எடுத்தார். அந்த படமும் பயங்கர ஹிட் அடித்தது. இதனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்தது. தெறி, பிகில், மெர்சல் என மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அட்லீ இந்திய சினிமாவால் கவனிக்கப்பட்டார். இதையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து எடுத்த ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, 1000 கோடி வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதனால் அட்லீ மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை இயக்கி வருகிறார்.…
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்முக்கிய திருப்பமாக,கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் செல்ஃபோன் உரையாடல் தொடர்பானதடயவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புற பகுதியில், ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி, மூன்று இளைஞர்களால்கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகியோர் துடியலூர் அருகே பதுங்கி இருந்த போதுபோலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,கருப்பசாமி மற்றும் தவசி காயம் குணமடைந்துள்ளதும், காளீஸ்வரன் இன்னும் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 50 பக்கங்கள் மற்றும் 200 பக்கங்களாககுற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போதுசெல்ஃபோன் உரையாடல் ஆதாரங்கள் அடங்கிய 270…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள். அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு…
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு எதிராக கோவையில் கடந்த 2013 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது குனியமுத்துரை சேர்ந்த வளையல் ஹக்கீம் என்பவரது வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வளையல் ஹக்கீம், திருநெல்வேலி சேர்ந்த கிச்சன் புகாரி, தென்காசியை சேர்ந்த சையது சுலைமான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் கைதான மூன்று பேரும் மற்றொரு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு பறிமுதல் வழக்கு கோவை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பெங்களூரில் இருந்து வளையல் ஹக்கீம், கிச்சன் புகாரி, சையது சுலைமான் ஆகிய மூன்று பேரை பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மினோ அடுத்த மாதம் 20…
கேரளா கோழிக்கோடு அருகே இரு தினங்களுக்கு முன், ஷிம்ஜிதா என்ற பெண் பேருந்தில் பயணிக்கும்போது தன்னை அநாகரிகமாக ஓரு நபர் தொட்டுவிட்டார் என்று அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து, ரீல்ஸ் மோகத்ததுக்காகவும், பயனர்களை கவரவும் அந்த நபரின் குணத்தை கேவலபடுத்தி, அவர் மீது வெறுப்பேற்றும் விதமாக பேசி இன்ஸ்டாவில் பதிவு போட அது வைரலாகியது. பேருந்தில் கூட்ட நெரிசலில் அறிந்தோ அறியாமலோ செய்த ஒரு தவறுக்காக, அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோவால் 37 வயதான தீபக் என்ற அந்த நபரை உறவினர்கள், அண்டை வீட்டார்கள், அக்கம்பக்கத்தினர்கள், வேலை பணியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களும் கீழ்த்தரமாக கமெண்ட்டுகளை போட்டுள்ளனர் தன்னை அறியாமல் நடந்த சம்பவத்தால் அவமானமும், கவலையும், மன உளச்சலும் கொண்ட தீபக், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஷிம்ஜிதாவின் ரீல்ஸ் பொறிக்கு இரையான தீபக்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, பலதரப்பினர்களும் கடும் கண்டனமும்,…
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமான மாநகரம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இரண்டாவது படமாக வெளியான கைதியும் அதேபோலத்தான். கைதி மூலம் இந்தியா முழுதும் பிரபலமானவராக மாறிய இயக்குநர் லோகேஷ், அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கி இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து அசத்தினார். லியோவுக்கு பிறகு ரஜினிகாந்த்தை வைத்து கூலி படம் இயக்கியிருந்தார். Blessed with the best @alluarjun #AALoki Looking forward to kicking off this journey with you sir 🤗Let's make it a massive blast 💥💥💥Once again with my brother @anirudhofficial 💥💥#AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026 சில படங்களை தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டி வந்த நிலையில, லோகேஷ் இயக்கும்…
பராசக்தி திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் ரசிகர்களை மறைமுகமாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் பதிவாகி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான பராசக்தி திரைப்படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றும், வசூல் ரீதியாகவும் பெரிய சாதனையை படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய சுதா கொங்கரா, திட்டமிட்டு தாக்கும் விமர்சனங்கள் விஜய் ரசிகர்களிடமிருந்து வருவதாக தெரிவித்தார். இதனை அவர் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம் என வர்ணித்ததுடன், இன்றைய தமிழ் சினிமா கோமாளி ரசிகர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகள் விஜய் ரசிகர்களிடையே கடும்…
கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே அரசு என்பது இருக்க முடியும் என்றும் ஆனால் ஜனநாயக முறையில் இயங்கும் நம் நாட்டில் அப்படி இருக்க முடியாது என்றும் எனவே நமது ஆட்சி முறைக்கு அது எதிரானது என்றும் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவை பொறுத்தவரைக்கும் தேர்தலுக்கு அவ்வளவு பெரிய செலவுகள் ஆவது இல்லை எனவும் ஆண்டுக்கு 5 முதல் 6 தேர்தல்கள் நடப்பது நல்லது என்றும் அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல்…
