Author: Prime Reporter

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியும், திருப்புமுனையாக அமைந்த படம் இது. வெங்கட்பிரபு இயக்கத்தில், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ரீ ரிலீசாகியது. பெரும் வரவேற்பை கொடுத்த அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் கொண்டாட, விஜய் ரசிகர்களும் மங்காத்தா ரீ ரிலீசை வரவேற்று பேனர் வைத்துள்ளனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தியேட்டர் வளாகத்தில் தவெக நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் மங்காத்தா படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். இதற்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசு வெடித்தும், டிஜே ஒலித்து மங்காத்தா படத்தை நடனமாடி கொண்டாடினர்.

Read More

மதுரை எய்ம்ஸ் என்ற எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? துரோகங்களை மட்டுமே தொடர்ந்து செய்யும் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்? என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு…

Read More

கோவையில் விசில் சின்னத்துடன் விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என த.வெ.க.வினர் ஒட்டியுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலில், தற்போது விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும் சக்தியாக உருவெடுத்து இந்திய அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில்,அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அதிகர பூர்வமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இது த.வெ.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,கோவையில் பல்வேறு இடங்களில் விசில் சின்னத்துடன் த.வெ.க. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன். தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார். அவரை மீண்டும் இணைய வைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு நன்றி கூறியுள்ளார் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியாவுக்கு வருகை புரிந்து விளையாடி வந்த நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதன் பிறகு ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. ஆனால் இந்திய அணி சார்பாக விராட் கோலி தனியாக போராடி சதமடித்து விளாசினார். இருந்து அது வீணாகிப் போனது. இந்த நிலையில் இளம் வீரர்கள் விராட் கோலியின் மனநிலையை பின்பற்ற வேண்டும் என இந்திய அணி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு நாள் கிரிக்கெட்டின் GOAT விராட் கோலி. 52 சதங்களை அடித்து சச்சின் சாதனையை முறியடித்தது அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது, அவர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் வெற்றியின் ரகசியம். சில வீரர்கள் எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார், ஆனால் கோலி ரன் குவிப்பதிலையே…

Read More

தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என சொல்வது அவ்வப்போது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது தனித்து போட்டியிட்டது. இரு தேர்தல்களிலும் தோல்வியை கண்ட அதிமுக, தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. ஆனால் இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன். தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார் டிடிவி. நேற்று வரை இபிஎஸ் – டிடிவி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி அரசியல் நடத்தி வந்த நிலையல், இன்று மீண்டும் இருவரும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது அரசியலில் முக்கியமாக…

Read More

இரண்டு மாதங்களுக்கு தோடர் பழங்குடியினர் மக்கள் விரதம் இருந்து வன பகுதிகளில் தங்கி இருந்து சேகரித்து வரும் மூங்கில், புற்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கூரை வேயும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியை இலங்கை, நார்வே, லண்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள தமிழர்கள் இருந்து தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து கேட்டறிந்தனர். நீலகிரி மாவட்டத்தில், தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய, 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது. இந்நிலையில், முத்தநாடு மந்து பகுதியில் உள்ள பெரிய கோவிலான மூன்போ தேக்கிசியம்மன் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை, 19 ஆண்டுகளுக்கு பின்…

Read More

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்துவரும் 50 வயதான சுரேஷ் என்பவர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த திருமலை நாயக்கன் பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போதையில் இருந்த சுரேஷ் மதுபான கூடத்திலேயே படுத்துவிட்டார். இரவு 11 மணியளவில் மதுபான கூட ஊழியர்கள் கூடத்தை மூடுவதற்காக உள்ளே இருந்த சுரேஷை தூக்கிக் கொண்டு வந்து கூடத்தின் முன் இருந்த கேட் முன்பாக வெளியில் படுக்க வைத்துள்ளனர். இந்தநிலையில் மதுபான கூடத்தில் ஏற்கனவே வாக்குவாதம் செய்த தமிழ்ச்செல்வன் இரவு 11.45 மணிக்கு அங்கு வந்துள்ளார். உடனே தான் வைத்திருந்த அரிவாளால் சுரேஷின்…

Read More

பொதுவாக ஒரு திரைப்படம் மனதுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுவது இயல்பு தான் என்றாலும், தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எத்தனையோ தமிழ் படங்களை கொண்டாடிய நம் தமிழ் சினிமா ரசகிர்கள், மலையாள படங்களை அண்மை காலமாக கொண்டாடி வருவது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆம், திஞ்சித் அய்யத்தன் இயக்கத்தில், பயானா மாமின், சுரப் சச்தேவா, நரேன், வினித், சந்தீப் பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் eko. படம் ஆரம்பம் முதல் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் இறுதி வரை கொண்டு சேர்த்த இயக்குநரின் திறமைக்கு சபாஷ் சொல்லலாம். மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கும் மலாத்தி என்ற மலேசிய பெண், அவரது கணவன் குரியச்சன் வசிக்கின்றனர். மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் கணவர். அவர் பெண் பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என குறைகூறும் மக்கள்,…

Read More

கோவையில் அதிர்ச்சி : வாலிபர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை முயற்சி – சமூக வலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள். கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது.இதனை தடுக்க காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை ஆசாமிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்து உள்ளது. ​கணபதி, பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், ஒரு வாலிபரைச் சூழ்ந்து கொண்ட ஐந்து பேர் கொண்ட போதை…

Read More