Author: Prime Reporter
பொங்கலுக்கு வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஜனநாயகன் படம் தெலுங்கு படமான பகவத் கேசரியின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இருப்பினும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் ஹெச் வினோத், இது விஜய் படம் என கூறிவருகிறார். இந்த நிலையில் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹெச் வினோத்தும், அண்ணனும் ஒரு நாள் கூப்பிட்டாங்க. ஒரு கேமியோ ரோல் இருக்கு.. அவ்ளோதான் சொல்ல முடியும் என லோகேஷ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் அனுபவம் முக்கியம், அந்த அனுபவம் இல்லாத ஒருவருடன் கூட்டணி போட யாரும் விரும்பமாட்டார்கள். விஜய் பூஜ்ஜியம் மாதிரி.. பூஜ்ஜியத்துடன் எண் சேர்ந்தால் தான் மதிப்பு… அது போல அனுபவம் இருந்தால்தான் அரசியலில் ஒரு நபருக்கு மதிப்பு உயரும். எம்ஜிஆர் சினிமாவிலும், அரசியலிலும் தொடர்ந்து பயணித்தவர். ஒரே நேரத்தில் இரண்டிலும் வெற்றி கண்டவர். சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவது கஷ்டம். நடிகர் விஜய், தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் அவசர முடிவுக எடுக்கக்கூடாது அதுபோல அவர் என்டிஏ கூட்டணிக்கு வந்தால், தொடர்ந்து நிம்மதியாக அரசியலை தொடரலாம், மாறாக திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அனுபவம் இல்லாததால் அதிமுக…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்துவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்குவருகை தந்தார் ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்குஇப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார் வியப்புக்குரிய மனிதர்தான். அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது உணவு முறை உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது எங்கள் நூறு நிமிட உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு…
இயக்குநர் மோகன் ஜி உருவாக்கிய திரௌபதி படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தன. இருப்பினும் அதே கூட்டணியை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் மோகன் ஜி. பொங்கலன்று வெளியாக வேண்டிய படம், திரையரங்குகள் கிடைக்காததால் தள்ளிப்போனது. குறிப்பாக விஜய்யின் தெறி படம் நேற்று மறுவெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்து ரீ ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை வைத்தார். இதையடுத்து கலைப்புலி தாணுவும் ஒத்துக்கொண்டு, தெறி மறு வெளியீட்டை ஒத்திவைத்தார். ஆனால் நேற்று திரௌபதி 2 படத்துடன் மங்காத்தா மறு வெளியீடு செய்யப்பட்டது. இதனால் திரௌபதி 2 வசூல் பாதிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் மோகன் ஜி, #திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல்…
சமூக வலைதளங்களில் பென்குயின் ஒன்று தனது கூட்டத்தை விட்டு வெளியேறும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் விஜய்யுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர். கடந்த 2007ஆம் ஆண்டு நிகிலிஸ்ட் என்ற பென்குயின் தனது கூட்டத்தை விட்டு 70 கிமீ தொலைவில் உள்ள மலைக்கு பயணம் செய்தது. மீண்டும் அதற்கு இரையை காட்டி திரும்ப செய்தாலும், அது மீண்டும் மீண்டும் மலைக்கு பயணம் செய்ய புறப்பட்டது. கூட்டத்தில் உள்ள மற்ற பென்குயின்களும், தடுத்து நிறுத்தினாலும் தனது இலக்கை நோக்கி அது பயணித்து கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைளதளங்களில் வைரலாகி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் அந்த பென்குயினே எங்கள் அண்ணன் விஜய் தான் மீம்ஸ் போட்டு வருகின்றனர். சினிமாவை விட்டு அரசியலில் குதித்துள்ள விஜய், கடினமான பயணத்தில் உள்ளார். சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் போனது, அரசியல் போட்டி என விஜய் சந்தித்து வரும் சிக்கல்கள் பல…
கேரள எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில், மது போதையில் மாணவிகளுடன் காரில் தாறுமாறாகச் சென்ற மாணவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் வார இறுதி விடுமுறையைக் கழிக்கச் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் அடங்கிய கும்பல் ஒன்று, மது போதையில் நிதானமின்றி காரில் கேரளா நோக்கிப் பயணம் செய்து உள்ளது. இதில் ஒரு மாணவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்து உள்ளது. குனியமுத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டு இருந்த போதே, சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதுவது போல் அதிவேகமாக தாறுமாறாக இயக்கி உள்ளனர். சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு காரைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும், மாணவர்கள் எதற்கும் செவிசாய்க்காமல் மின்னல்…
மலையாளத்தில் வெளியான Falimy படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதீஷ் சஹதேவ், தனது இரண்டாவது இயக்கமாக தமிழில் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இளவரசு, தம்பி ராமையா மற்றும் பிரார்த்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் பிரதிபலனாக, வசூல் ரீதியாகவும் படம் கணிசமான முன்னேற்றத்தை காட்டியுள்ளது. தற்போது 9 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம், உலகளவில் இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த கணவனை காத்திருந்து காரில் அழைத்து சென்று மனைவி செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தெலங்கானாவில் பெத்தரவிடு பகுதியை சேர்ந்த லாலு சீனு என்பவர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். லாலு சீனு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலும் போதை பழக்கத்துக்கு அடையான அவர், கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே லாலு சீனு மனைவி ஜான்சி, தனது தம்பியின் நண்பருடன் கள்ளக்காதலில் விழுந்தார். இந்த கள்ளக்காதல் சம்பவம் சிறையில் இருந்த கணவருக்கு தெரியவர, சிறைக்கு கணவனை பார்க்க சென்ற ஜான்சி மற்றும் அவரது தம்பியை வெளியே வந்தவுடன் உங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்த சதி திட்டம் தீட்டினார். குண்டூரை சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.2 லட்சத்துக்கு பேரம் பேசி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். இதையடுத்து…
டாடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கணேஷ் கே பாபு. டாடா படம் மூலம் நல்ல திறமையான இயக்குநராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் கராத்தே பாபு. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சம்மந்தப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ரவி மோகன். இவருடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், தவுதி எஸ் ஜிவால், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கடந்த வருடம் பிரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் கராத்தே பாபு என்பது ஆளுங்கட்சி அமைச்சரான சேகர் பாபுவின் கதை என ஒரு பக்கம் பேச்சுகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் படக்குழு மறுத்தது. இன்று டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தொழிலுக்காக அரசியல் பண்ற. நான் அரசியலையே தொழிலா பண்றேன் என ரவி மோகன் பேசிய பஞ்ச் அனல் பறக்க விட்டுள்ளது.
கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தொடர்ச்சியான பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறினார். கடந்த 7ஆம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற்றதாகவும், அந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட குழுவின் கருத்துகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, சில ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து தவறான செய்திகள் வெளியாகி வருவதாக குற்றம்சாட்டினார். 2026 சட்டமன்ற தேர்தலை புதிய தமிழகம் கட்சி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும் என்றும்,…
