Author: Prime Reporter
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். காரைக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர் கண்டனூர் வழியாக புதுவயல் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில், கண்டனூர் செக்போஸ்டில் பறக்கும் படையினர் சீமானின் வாகனத்தை சோதனைக்காக நிறுத்தினர். அப்போது காலில் இருந்து இறங்கிய சீமான் பறக்கும் படை பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி வரும் காரை நிறுத்தி சோதனை இடுங்கள் என்று கோபமாக பேசிய சீமான் பின்பு காரை சோதனையிட அனுமதித்தார். இதில் அப்சட்டான பெண் அதிகாரி தலைமையிலான பறக்கும் படையினர் கடமைக்காக காரை சோதனையிட்டு அனுப்பி வைத்தனர். ஒரு கட்சியின் தலைவரான் சீமான் தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்களை மதிக்காமல் வாக்குவாதம் செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தில், ‘பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிய ஜூலி, “வாடா பார்ப்போம்” என சவால் விடும் வகையில் வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார்.
தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா? முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா? அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா? கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள்…
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்யின் முடிவை விமர்சிக்கும் நெட்டிசன்கள், மறைந்த நடிகர் விஜயகாந்தின் பழைய சினிமா வசனத்தை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது அதன்படி வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கும் பயணத்தில், கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் பக்கபலத்தில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஆர்பரிக்கும் ஆதரவுக்கு மத்தியில் – தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன். என்னை குடும்பத்தில் ஒருவராகப் பார்த்து தங்கள் பேரன்பையும் பேராதரவையும் வழங்கிவரும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பேன். அவர்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். வில்லிவாக்கம் மக்களின் நல்வாழ்விற்கு எப்போதும்…
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் 31 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி, உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கோவை வாளையார் அருகே கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் மோதி கேரளாவைச் சேர்ந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை. மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல… கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-&-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருந்தேன். இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில்…
