Author: Prime Reporter
ஆண்களுக்கு பெண் நிகர் என்பது இன்றைய அறிவியல் காலத்தில் சாத்தியமாகி வருகிறது. ஒரு பக்கம் ஆண்கள் கோலோச்சிய பல்வேறு துறைகளில் பெண்கள் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.அதே சமயம் ஆண், பெண் இருபாலினருக்கும் சளைக்காமல் போட்டி போட்டு வருகின்றனர் மூன்றாம் பாலினத்தவர்கள். இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கோவையை சேர்ந்த பத்மினி பிரகாஷ். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை தாண்டி பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தன்னுடன் படித்தவரை தனது வாழ்க்கை துணையாக தேடிக் கொண்டவர் பத்மினி பிரகாஷ். ஒட்டுமொத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் பத்மினி பிரகாஷ். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் இவர் கணவர் பிரகாஷ். கணவர், மகன் என அழகான குடும்பத்துடன் கோவையில் வசித்து வரும் பத்மினி, படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய கேரியரை வீணாக்காமல், தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நுழைந்தார். இந்தியாவில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அவர், தமிழ் துறையில்…
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இன்று மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. Vaanga na!!!🔥#JanaNayagan pic.twitter.com/E6bTdipZ1F— Christopher Kanagaraj (@Chrissuccess) December 27, 2025 நிகழ்ச்சி தொடங்கும் முன்பே திடீர் மழை பெய்ததால், விஐபி சீட்டில் அமர்நதவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. விஜய்யின் கடைசி படம் என்பதால் பல ரசிகர்கள் மலேசியா புறப்பட்டு வந்துள்ளதால் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. Finallyyy rio raj hosting Begins 🥳🔥 #JanaNayaganAudioLanuch pic.twitter.com/Ld8neJAps2— Dharshini S (@Dharshini_tvk) December 27, 2025 விஜய் கோட் சூட்டுடன், கையில் காப்புடன் வந்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் நிகழ்ச்சியை நடிகரும், VJ ரியோ தொகுத்து வழங்கிய வீடியோவும் இணையத்தில்…
கோவை அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓரைக்கால்பாளையம், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனி குடியிருப்பு வளாகம் பகுதியில், 25.12.2025 அன்று 5 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக,அன்னூர் காவல் நிலைய குற்ற எண் 635/2025, பிரிவுகள் 140 மற்றும் 303(2) BNS கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் புகார்தாரர் இம்ரான் @ அம்ததுல் இஸ்லாம் (29) என்பவர், தமது 5 வயது மகன் காணாமல் போனதாகவும், வீட்டில் வைத்திருந்த VIVO செல்போன் (மதிப்பு ரூ.10,000/-) திருடிச் செல்லப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்களிடம் வரவேண்டிய சம்பளப் பணம் ரூ.1,80,000/- வழங்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் புகார் அளித்தார். மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனியில் முன்பு பணிபுரிந்த அன்வர் அலி (18) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர், சம்பளப் பணம் தொடர்பான முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தி, புகார்தாரரின் செல்போனை திருடிச்…
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் படையே உண்டு, முக்கியமாக இல்லத்தரசிகள் தங்கள் வேலைகளை சீரியல்களை பார்த்துக் கொண்டே செய்கின்றனர். ஒவ்வொரு சேனல்களிலும் புத்தம் புது சீரியல்களை களமிறக்கி பெண்களை இழுக்கின்றனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூட சீரியல்களை ஒளிபரப்புகின்றனர். அப்படி இந்த வாரம் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம். இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது மூன்று முடிச்சு சீரியல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு 10.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே, 9.89 டிஆர்பி ரேட்டிங்குடன் பயணிக்கிறது. 3வது இடம் கயல் சீரியல் 9.07 டிஆர்பி ரேட்டிங், 4வது இடம் மருமகள் 8.67 டிஆர்பியுடனும், 5வது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் 8.57 டிஆர்பி ரேட்டிங்குடன் இடம்பிடித்துள்ளது. முதல் 5 இடங்களை சன்டிவி சீரியல்களே பிடித்துள்ளது. 6வது…
கோவையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியின் உயிர் பிரிந்தது. விபத்தின் நெஞ்சை பத, பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கோரகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பயணிகளை ஏற்றி மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கோகுலம் என்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகணத்தின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் ஏறியது. இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்த கணவர் முகமது ரபீக் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த முகமது ரபீக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவையில் அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகளால் இதுபோன்ற…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் அரசியலில் குதித்துள்ளதால், தனது ஜனநாயகன் படம்தான் கடைசி என அறிவித்தார். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இன்று மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதனால் நேற்று காலை முதலே ரசிகர்கள் பலர் மலேசியாவுக்கு படை திரண்டனர். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர்களான இயக்குநர்கள் நெல்சன், அட்லீ, லோகேஷ் ஆகியோர் ஆடியோ வெளியீட்டுக்காக மலேசியா சென்றுள்ளனர். 🔥 When the HIT-maker arrives, the vibe changes instantly! 🔥Lokesh Kanagaraj at the #JanaNayagan audio launch = pure goosebumps 🐐🎶Silent walk. Loud impact. Mass presence…
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியலின்படி 25,74,608 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர் இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான ஒரு மாத காலத்திற்கு ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் (Claims and Objectionar)பெறுவதற்கான காலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது இக்கால கட்டத்தில் 01.01.2026 அன்று 18 வயதினை நிறைவு செய்யும் இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் ஆகியோர் படிவம் 6-லும் வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் செய்தல் முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் என குறியீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை தொலைந்திருப்பின் புதியதாக அடையாள அட்டை…
கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோழிகள் மற்றும் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த கோழிகள் மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது அதன்படி தமிழக–கேரள எல்லை சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல்…
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் கடந்த 53 நாட்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் இலங்கை நீதிமன்றம் இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்துள்ளது ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் மீன்பிடிக்கச் சென்றபோது கடல் எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த கைது சம்பவம் தொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனையில் இருந்தனர் மேலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு மீனவர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக இலங்கை நீதிமன்றம் 4 மீனவர்களையும் 53 நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்துள்ளது…
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் (sports hup) என்ற கடையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு இருந்த பொருட்களை பார்வையிட்டார். பின்னர் ரசீது பதிவு செய்யும் கணினி டேபிள் அருகே வந்து நின்ற பெண் அங்கும், இங்கும் பார்வையிட்டு பின்னர் நைசாக அந்த டேபிளில் இருந்த வாசனை திரவியம் பாட்டிலை எடுத்துக் கொண்டு நைசாக அங்கு இருந்து வெளியே செல்கிறார். இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.இந்நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கடை உரிமையாளர் பார்த்தார். அப்பொழுது அந்தப் பெண் உள்ளே இருந்து வாசனை திரவிய பாட்டிலை நைசாக எடுத்துக் கொண்டு காட்சிகளைப் பார்த்த அவர் மேலும் இதேபோன்று பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் உரிமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை…
