Author: Prime Reporter
தண்டாவளத்தில் தலையை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலி கான் தனது இந்திய ஜனதா கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லால்குடி தொகுதிக்குட்பட்ட கல்லக்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்தது. கல்லக்குடி ரெயில் நிலைய தண்டவாளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒருகாலத்தில் போராட்டத்தின் ஒரு பகுதியாக படுத்திருந்த இடத்தில், மன்சூர் அலிகான் சில நிமிடங்கள் படுத்திருந்தார். துக்கம் தாளாமல் சென்னை அணி ஜெர்சிக்கு முத்தமிட்ட RR வீரர் ஜடேஜா.. வைரலாகும் வீடியோ! இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்லக்குடி ரெயில் நிலையம் ஒரு வரலாற்றுச் சின்னம். முத்தமிழறிஞர் கலைஞர் படுத்திருந்த அந்த…
சென்னை ஐஐடி-யில் 2026-27 கல்வியாண்டிற்கான முதுகலை (M.Tech) படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது; ஏஐ, டேட்டா சயின்ஸ் மற்றும் இவி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.
சோசியல் மீடியா உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் அண்ணா” – சமூக வலைதளங்களில் இணைந்த சுந்தர் சி-யின் புதிய அவதாரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஆர்த்தி ரவி பதிவிட்ட வைரல் பதிவு
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. Chennai Super Kings மற்றும் Rajasthan Royals அணிகள் மோதிய இந்தப் போட்டியில், சென்னை அணி எதிர்பாராத விதமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியின் போது நடந்த ஒரு சிறிய சம்பவம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. மைதானத்தில் இருந்த Ravindra Jadeja திடீரென Khaleel Ahmed அணிந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் பதிக்கப்பட்டிருந்த லோகோவை முத்தமிட்டார். இந்த எதிர்பாராத செயல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, கடந்த சீசன் வரை சென்னை அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கிய ஜடேஜா, இந்த ஆண்டு நடந்த மெகா ஏல மாற்றங்களால் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். அதுவே இருந்தபோதிலும், சென்னை அணியுடன் உள்ள அவரது உணர்ச்சி பிணைப்பு இன்னும் குறையவில்லை என்பதை இந்தச் செயல் வெளிப்படுத்துகிறது என ரசிகர்கள் கருத்து…
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக பங்குனி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி (திங்கட்கிழமை)நேற்று இரவு 1மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது. கறிவிருந்தில் புன்னாபட்டி, ட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். (கடந்த திங்கட்கிழமை அன்றும் இக்கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)
தளபதி விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக பிக் பாஸ் ஜூலிக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழக பெண் தொண்டர் ஒருவர் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது
கரூர்ல ஆம்புலன்ஸ்.. கொளத்தூர்ல பஸ்.. எங்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்துங்கள்.. பொதுமக்கள் ஆவேசம்..!
கரூர் ஆம்புலன்ஸ் மற்றும் கொளத்தூர் பஸ் பிரச்சனைகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகப் பொதுமக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ள ஆதங்கப் பேட்டி
அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர், மெதுவாக தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வந்தார். இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரான சாய் ரோஷன் ஷாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜனனி. சென்னை பிறப்பிடமாக கொண்ட சாய் ரோஷன் ஷா, தற்போது துபாயில் விமானியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இன்று இருவரும் வாழ்க்கை துணையாக இணைந்துள்ளனர். மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. மிக எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நெருங்கிய உறவினர்களின் வாழ்த்துகளுடன் நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Janani iyer got married to her love of life…
ஆளி விதைகளில் உள்ள பி காம்ப்ளக்ஸ், ஒமேகா 3 மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதோடு, இதயம் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
கொளத்தூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
