Author: Prime Reporter
பாஜக கொடுத்த தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று பணியாற்றி வருகின்றனர். இதனிடையே விருகம்பாக்கம், சிங்காநல்லூர் உட்பட 6 தொகுதிகளுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தனது தந்தையின் உடல்நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனால் சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேறு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “என் தந்தையின் உடல்நலக் காரணமாக தற்போது நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனிப்பது எனது கடமை. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து தற்போது கூற முடியாது; அதற்கு காலமே பதில் சொல்லும். தந்தையின் உடல்நிலை காரணமாக சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுகிறேன். இது குறித்து…
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக அரசியலில் நிதர்சனமான, உண்மையான போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையேதான் உள்ளது. நடிகர் விஜயை ஒரு அரசியல் சக்தியாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நானும் ரவுடிதான், என்னை ஜீப்பில் ஏற்றுங்கள்’ என்று ஒருவர் கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்?” என விமர்சித்தார். மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும், ஈவு இரக்கமும் இன்றி கட்சியின் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் நடனம் ஆடியதாக குற்றம்சாட்டினார். “அந்த குடும்பங்கள் எவ்வளவு மனவேதனை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “த.வெ.க. தலைவராக இருக்க நடிகர் விஜய்க்கு அரசியல் அருகதை இல்லை. லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தில்தான் அவர் அரசியல் கட்சியை நடத்துகிறார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே மட்டுமே” என்றார்.…
தமிழ்நாடு அரசின் உலகளாவில் சுற்றுலா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக இமேஜிகா Imagica World Entertainment நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள இத்திட்டம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் இமேஜிகா நிறுவனம் புதிய Amusement Parkஐ அமைக்க உள்ளது. சென்னையில் வொண்டர்லா நிறுவப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக முக்கிய நகரமாக கருதப்படும் கோவையை இமேஜிகா நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க், ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான இமேஜிகா தமிழகத்தில் கால் பதிக்க உள்ளதால் சுற்றுலாத்துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.
சில காதல்கள்… கத்திப் பேசாது. அவை… அமைதியாக மனதில் பதியும். வெறும் காதல் கதை மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையின் உணர்வுகளை அமைதியாக ஆனால் ஆழமாக பேசும் சினிமா தரமான கதைகளைத் தேர்வு செய்யும் ஜோ திரைப்பட தயாரிப்பாளர்களின் அடுத்த சினிமா முயற்சி… ‘ஹைக்கூ’. நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஜோ, கோழிப்பண்ணை செல்லத்துரை படங்கள் மூலம் கவனம் பெற்ற ஏகன், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன், மின்னல் முரளி, சேஷம் மைக்கேல் பாத்திமா படப் புகழ் பெமினா சார்ஜ் மற்றும் கோர்ட் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜோ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஹரிஹரன் ராம், ஹைக்கூ படத்திற்கு கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குவது யுவராஜ் சின்னசாமி. இதற்கிடையே, நடிகர் ஏகன் நடிக்கும் ஹைக்கூ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே உலகளாவிய OTT…
நல்ல தரமான திரைப்படங்களை பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சினிமா விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு சினிமா விருதுகளுக்கு தேர்வான திரைப்படங்கள், கலைஞர்கள் பெயர் வெளியானது. விருதுக்கு தேர்வான பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சில பிரபலங்கள் தரமான படங்களை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு .. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற…
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தனக்காக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அடுத்தடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார். D55 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தனுஷின் Wonder bar Studio தயாரிக்கிறது. ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளார். இருவரும் மாரி 2 படத்தில் ஏற்கனவே நடித்திருந்தனர். மேலும் இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இனி டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தவெக தொடங்கி இன்றுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து தவெக சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக தலைமையில் மற்றும் பலர் என கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார். இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜய்க்கு எதுவும் தெரியாது என நினைக்கிறேன், கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆடிக்கொண்டு இருக்கிறார். ஒரு நாட்டில் ஒரு கட்சியின் தலைவர் இப்படி மேடையில் தமிழ்நாட்டின் கலாச்சாரமே தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் டான்ஸ் மட்டும் தான் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ கூட்டணியில் பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன,. அது கூட தெரியாமல் விஜய் பேசிக்கொண்டிருந்தால் எப்படி என விமர்சித்தார்.
தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஹெச் ராஜா பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்து. இதையடுத்து ஹெச் ராஜா உடல்நலம் குறித்து நேரிலும், தொலைபேசியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வந்தனர். நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றார். ஹெச் ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களை, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், இன்று சென்னையில் மருத்துவமனையில்…
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சாலை விபத்தில் இந்து உயிர்தப்பிய சிறுமியின் காட்சி வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கொடியத்தூர் பகுதியில் ஆட்டோவில் தனது தந்தையுடன் குழந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தது. அப்போது ஆட்டோ நின்றவுடன், இறங்கிய குழந்தை, சாலையின் மறுபுறம் நின்றிருந்த தாயிடம் ஓடி சென்றது. அந்த நேரத்தில் தந்தை ஆட்டோ ஓட்டுநருக்கு கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது, கோழிக்கோட்டிலிருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தின் முன்பாக குழந்தை ஓடியது. எதிர்பாராத விதமாக குழந்தை சாலையை கடந்து ஓடுவதை பார்த்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை வலப்புறமாக திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சாலை விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய குழந்தை… pic.twitter.com/OfJqdzV3MY— Ramesh (@RHoneykumar) February 2, 2026 சாலையோரத்தில் வாகனங்களில் இருந்து இறங்கும் போது குழந்தைகள் மீது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக இந்த சம்பவம்…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்துள்ளார். அவரது கடைசி படமான ஜனநாயகன், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் பிரச்சனையால் படத்திற்கு தடை தொடர்ந்து கொண்டே வருவதால், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024ஆம் ஆண்டு துவங்கியிருந்த நிலையில், 2 ஆண்டுகள் முடிந்து 3ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. Vibe with Thalapathy @TVKVijayHQ 🕺🏽 pic.twitter.com/OZBdWT3GgB— Vijay Fans Trends (@VijayFansTrends) February 2, 2026 இன்று நடந்த 3ஆம் ஆண்டு துவக்க விழாவில், கட்சியினர் மத்தியில் விஜய் அனல் பறக்க பேசினார். அதில் ஒரு பகுதியாக, பாடகர் வேல்முருகன் பாடலை பாடினார். மேலும் விஜய்யை நடனமாட வேண்டும் என வேண்டுகோள் வைக்க, விஜய் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியக்களில்…
