Author: Prime Reporter

சென்னையில் உள்ள பிரபல நடிகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் நடிகர் அருண் விஜய். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமான அவர், பல படங்களில் நடித்தும் பெரியதாக எந்த படமும் அவருக்கு எடுபடவில்லை. 30 வருடமாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது என்னை அறிந்தால் படம். பின்னர் வாய்ப்புகள் குவிந்தது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அருண் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் சோதனையில் அது வதந்தி என தெரியவந்துள்ளது. மெயில் மூலம் வந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு திமுக அரசு கூச்சப்பட வேண்டும், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்துள்ளது திமுக அரசு. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த 3வது நாளே அதே கோவையில் பெண் காரில் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது என இபிஎஸ் சரமாரி விமர்சனம்

Read More

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள சுந்தராபுரம் ரோடு பாரதி காலனியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). இவர் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 28). இவர் மதுக்கரை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். விக்னேஷ் குமாருக்கு திருமணம் ஆகி சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதனால் அவரது மனைவி சரண்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விக்னேஷ் குமார் அவரது பாட்டி சாரதாம்பாள், தந்தை செல்லத்துரை பராமரிப்பில் இருந்து வந்தார். ஆனாலும் தொடர்ந்து தினமும் விக்னேஷ் குமார் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் குமார் குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.…

Read More