Author: Prime Reporter
மத்திய பாஜக வெளியுறவுக் கொள்கை குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு. அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம். தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால் கொழுக்கட்டை என்பது அனைவரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும், இது மிகவும் சுவையாகவும், கிரீமி சுவையுடனும் இருக்கும். இந்த பால் கொழுக்கட்டை அதன் இனிப்புச் சுவை மற்றும் சாப்பிடுவதற்கு அருமையாக இருப்பதால் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. பால் கொழுக்கட்டை செய்வதற்கான ஒரு எளிய செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1 கப் அரிசி மாவு1 கப் தண்ணீர்1 டீஸ்பூன் நெய்ஒரு சிட்டிகை உப்பு1½ கப் கெட்டியான தேங்காய்ப் பால்1 கப் நீர்த்த தேங்காய்ப் பால்½ கப் வெல்லம் (அல்லது விருப்பத்திற்கேற்ப சர்க்கரை)¼ டீஸ்பூன் ஏலக்காய் தூள் செய்முறை:
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளவர். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வைத்துள்ளவர். கடைசியாக இட்லி கடை படத்தை இயக்கியிருந்த தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணைந்துள்ளார். அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த அவர் தற்போது தனுஷ் உடன் இணைந்துள்ளளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி என முக்கிய நடிகைகள் இணைந்த நிலையல், மெகா ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரர்ததில் நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷ் 55வது படத்தின் நடிகர் நடிகைகள் இணைந்துள்ள நிலையில், 7 வருடம் கழித்து மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி தமிழ் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கடவுளான முருகன், எண்ணற்ற கோவில்களில் வழிபடப்படுகிறார், அவற்றில் பல புகழ்பெற்ற யாத்திரை மையங்களாக உள்ளன. இருப்பினும், புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளுக்கு அப்பால், முருகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல மறைக்கப்பட்ட பழங்காலத் தலங்களிலும் அமைந்துள்ள இந்தக் கோவில்கள், அமைதியையும் தெய்வீக ஆசீர்வாதங்களையும் நாடும் பக்தர்களுக்கு ஒரு தெய்வீகப் புகலிடமாக அமைகின்றன. தமிழ்நாட்டில் அமைந்துள்ள விராலிமலை முருகன் கோவில், தெய்வீக நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக வரலாற்றைக் கொண்ட முக்கியத்துவம் நிறைந்த ஒரு வளமான கோவிலாக உள்ளது. புராணக் கதை: சாஸ்திரங்களின்படி, முருகனின் புகழ்பெற்ற பக்தரான அருணகிரிநாதர், விராலிமலைக்குச் செல்லுமாறு முருகன் அவருக்குக் கட்டளையிட்ட ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். அவர் அந்தப் பகுதியை அடைந்தபோது வழி தவறியபோது, முருகன் ஒரு வேட்டைக்காரர் வடிவில் தோன்றி, அவரை கோவிலுக்கு வழிகாட்டினார், இது அருணகிரிநாதரின் பக்தியை மேலும் வலுப்படுத்தியது. ஒரு ஆசீர்வாதமாக, முருகன் அவருக்கு அஷ்ட சித்திகளை (எட்டு அமானுஷ்ய சக்திகள்) வழங்கினார் மற்றும் தனது தெய்வீக…
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க பலவிதமான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பிற உணவுமுறைகள் என பல இருக்கின்றன. இந்த உணவுகள் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளை உங்கள் உணவில் அதிகமாகச் சேர்ப்பதன் மூலம், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் நீங்கள் குறைக்கலாம். பெர்ரி பழங்கள் பெர்ரி பழங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அவற்றில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆந்தோசயனின், எலாஜிக் அமிலம் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நமது செரிமான மண்டலத்தில் புற்றுநோயைத் தடுக்க உதவும். மீன் மீனில், குறிப்பாக சால்மன், சூரை மற்றும் நெத்திலி போன்ற எண்ணெய் மீன்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் புரதமும் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் மீன், அழற்சியை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. பருப்பு…
தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் கீதா கோவிந்தம் திரைப்படம் தான் அவருக்கு திருப்பத்தை தந்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா.கர்நாடகாவை சேர்ந்த இவர், கன்னட படங்களை விட தெலுங்கு படங்களில் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது முதல் விஜய் ராஷ்மிகா இடையே காதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் இதை மறுக்கவில்லை. தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில், ராஷ்மிகாவோ பான் இந்திய சினிமா ஸ்டாராக உயர்ந்தார். தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவில் பேசப்பட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது வதந்தி என்பது உறுதியானது. இது குறித்து ஹிந்தி ஊடங்களில் பேசியுள்ள ராஷ்மிகா,…
இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 80களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து 80களில் பான் இந்திய ஸ்டாராக உயர்ந்தார். தொடர்ந்து ரேவதி நடிக்க மட்டும் செய்யாமல், தயாரிப்பு, இயக்குனர் என பன்முக திறைமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக மிடிர், பாய் பிரெண்ட் ஆகிய ஆங்கில படங்களை இயக்கினார். படம் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் சிறந்த ஆங்கில படத்துக்கான விருதையும் பெற்றார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பேருந்தில் பயணம் செய்தேன்.அப்போது ஒரு நபர் என்னிடம் தவறாக நடந்தான். உடனே அந்த இடத்தில வைத்தே அவனை பளார் என்று அறைந்துவிட்டேன். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.…
கடந்த வாரம் மகாராஷடிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்து சிதறியதால் அவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பங்கஜா முண்டே இன்று காலை லத்தூர் செல்ல புறப்பட்டார். லத்தூரில் மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென்று அவர் பயணம் செய்ய வேண்டிய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி இந்த தகவலை அமைச்சரிடம் கூற, அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி…
சமீபத்தில் இந்திய சினிமா முழுவதும் தனுஷ் குறித்து ஒரு வதந்தி பரவியது. தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை மணமுடிக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவியது. வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என கூறப்பட்டு வந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைத்தனர். ஆனால் இது குறித்து இருவரும் எந்த தகவலும் கூறவில்லை. இந்த நிலையில் திருமண விவகாரம் குறித்து முதன்முறையாக நடிகை மிருணாள் தாகூர் மனம் விட்டு பேசியுள்ளார். அதில் என்னை பற்றியும் தனுஷ் குறித்து பேசுவது அத்தனையும் பொய். எதுவும் ஆதாரமற்ற செய்திக, எப்போதும் எனக்கு அவர் நல்ல சகோதரர் மட்டும்தான் என கூறி வதந்தி பரப்புவர்களின் வாய்க்கு பூட்டு போட்டுள்ளார்.
