Author: Prime Reporter

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார். திமுகவை ஒரு “தீய சக்தி” என விமர்சித்த அருண்ராஜ், அந்த சக்தியை வீழ்த்துவதே தவெக-வின் முதன்மை இலக்கு என்றார். கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கட்சி மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், “திமுக சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்” என உறுதிபடத் தெரிவித்தார்.

Read More

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நிலையில், சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், விழுப்புரத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். அது மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என முதல் மாநாட்டிலியே அறிவித்தது, சக அரசியல் கட்சிகளிடையே பேசுபொருளானது. திமுக, அதிமுக இதுவரை கூட்டணி போட்டு ஆட்சி நடத்தினாலும், இது ஆட்சியில் பங்கோ, அதிகாரமோ கொடுத்ததில்லை, ஆனால் விஜய் கட்சி தொடங்கிய போதே இதை அறிவித்தார். ஆனால் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி பேரம் பேசவில்லை. இது குறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் கொள்கை முதுடிவு. கூட்டணிக்கு கட்சி வருவார்கள் என…

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு, தமிழகம் முழுவதுமே மோசமான சூழலில் இருக்கிறது. ரவுடித்தனம் செய்தால், நாளை திமுகவில் அமைச்சராக்குவார்கள் என்ற எண்ணத்தில், திமுக நிர்வாகிகள் அனைவருமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு,… pic.twitter.com/q6SRV3t3ju— K.Annamalai (@annamalai_k) February 6, 2026 இவர்களின் கொட்டம்…

Read More

குத்து பாடல்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் முன்னணி நடிகையாக மாறுவது வாடிக்கையாக விஷயமாக மாறிவிட்டது. அப்படி எத்தனையோ நடிகைகள், ஒரு பாட்டுக்கு ஆடி ஃபேமஸாகி, முன்னணி நடிகர்களுடன் இணைந்து சினிமாவில் கோலோச்சியுள்ளனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீ லீலாவுக்கு தனியிடம் உண்டு. கவர்ச்சியாக பாடல்களில் தோன்றினால், அது டிரெண்டிங் ஆகி பெரிய ஹிட் கொடுத்துவிடும். தற்போது டிரெண்டிங் நடிகையாக தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா. இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளார். ஐதராபாத்தில் நேற்று மால் திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த ஸ்ரீலீலாவுக்கு ரசிகர் ஒருவர் லவ் லெட்டர் கொடுத்துள்ளார். View this post on Instagram A post shared by @kissik_celeb அதை படித்த ஸ்ரீலீலா, அந்த ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கமல் பேசிய உரை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல் உரையை பேசினார் கமல்ஹாசன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி தொடங்கிய கமல்ஹாசன், ஆங்கிலத்தில் சரளமாக பேசி பின் தமிழில் முடித்தார். அவர் தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாடலாசிரியர், கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில், கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும்… “அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சுஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல் நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின்தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும்.. என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும்.. காடு அதிரட்டும்களிறே பிளிறு” என குறிப்பிட்டுள்ளார்.

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களின் தந்தை, மறைந்த கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மருத்துவர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திரு ஸ்டாலின், தற்போது அரசு மருத்துவர்களின் குரலை திட்டமிட்டு மவுனப்படுத்தி வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாண்புமிகு நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும் கூட, திமுக அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை. அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது. DACP ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக…

Read More

பல வெற்றி படங்களின் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது “அரசன்” திரைப்படம். இதில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சிம்பு இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முன்னதால் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீடு மற்றும் நடிகர் விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “விஜய் பல ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். ஜனநாயகன் அவரது கடைசிப் படம் என்பதால், அந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ட்வீட் செய்தேன். அரசியல் குறித்து எனக்கு அறிவில்லை; அதைப் பற்றி பேச நான் சரியான நபரும் அல்ல. அவரது அரசியல் பயணத்திற்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.

Read More

நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் இணைந்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்டுகள் தினம் தினம் வலம் வந்த நிலையில், இன்று பட பூஜை வெகு விமர்சையாக நடந்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையைமக்கிறார். பிரம்மாண்டமாக ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. படத்தின் பூஜை விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பட பூஜையே இந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தியிருக்காங்களே என நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக எம்.பி. திருமதி கனிமொழி, எப்போதும் போல உண்மைகளை அறியாமல் பேசுகிறார். தனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் ஊழல் நிரம்பிய தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. தற்போது தமிழ்நாட்டில் ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு தவறியதால், இந்த திட்டங்களின் செயல்பாடு தாமதமாகி வருகிறது. இந்த ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவையான 4,326 ஹெக்டேர் நிலங்களில், 2025 டிசம்பர் நிலவரப்படி, தமிழ்நாடு அரசு வெறும் 24% நிலங்களையே கையகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதே நிலை தமிழ்நாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பொருந்துகிறது. ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை செயல்படுத்துவதில், ஊழல்மிக்க திமுக அரசு திட்டமிட்டு ஏற்படுத்திய…

Read More

சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது என தெரிவித்தார். பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத காரணத்தினால் தான்…

Read More