Author: Prime Reporter

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது தமிழக அரசியல் கட்சிகள். இதனிடையே திமுக – தவெகவுக்குத்தான் போட்டி என விஜய்யின் தவெக கட்சியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து கடுமையாக பேசியுள்ளார். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தான் தவெக. இவங்களெல்லாம் அதிமுகவை பற்றி பேச என்ன அருகதை இருக்கு. ஆதவ் அர்ஜூனா அதிமுக குறித்து பேச எந்த தகுதியும் இல்லாத நபர். முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகமே தெரியாதவர். சிறந்த நிர்வாகத்தை நடத்தி காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவருக்குதான் மக்கள் ஓட்டு போட முடிவெடுத்துவிட்டார்கள். எம்ஜிஆர் காலத்தில் இருந்து இப்போது வரை திமுக – அதிமுக இடையேதான் நேரடி போட்டி. எனவே மற்றவர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அரசியல் பண்பாட்டை…

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சட்டத்தை அமல்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து வந்தவர் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கோ, புலம்பெயர் தொழிலாளர்களை தொந்தரவு செய்வதற்கோ, அவமதிப்பதற்கோ அல்லது தாக்குதல் நடத்துவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. இத்தகைய செயல்கள் தமிழ்நாடு மாநில காவல்துறையிலேயே நடைபெறுவதை காணும்போது, மாநிலம் முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊழல்மிக்க திமுக அரசின் கண்காணிப்பின் கீழ், உடல் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்களுக்கு அதிகமாக உள்ளாகி வருவது ஆச்சரியமளிப்பதல்ல. தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கும் இன்றியமையாத பங்களிப்பை நாம் இப்போது உணர்ந்து, ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானம் முதல் குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறிய உற்பத்தி அலகுகள் வரை — நமது பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு தூணும் அவர்களின் உழைப்பின் மீது பெரிதும்…

Read More

watermelonஐ வைத்து ஸ்டாராக உருவான திவாகரை கொஞ்சம் பேருக்குதான் தெரியும் என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பின் பிரபலமாக மாறிவிட்டார். பிக்பாஸ் சீசனுக்கு பின் திவாகர் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல அவமானங்கள், கேலி, கிண்டல்களுக்கு அப்பறமாக எனக்கு ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. நடிப்பு அரக்கனை நீங்கள் வெள்ளித்திரையில் பார்க்க போறீங்க, எனக்கு வரப் போகிற மனைவி திரிஷா, சமந்தா போல இருக்க வேண்டும் என கூறினார். அப்போது செய்தியாளர் குறுக்கிட்டு, திரிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூற, அதற்கு பதிலளித்த திவாகர், நான் அவங்களை விட சின்ன பையன் என கூறினார். மேலும் என் வயதை பற்றி சிலர் தவறாக எழுதுகிறார்கள், என்னுடைய பிறந்த வருடம் 1988 என்று அப்போது அவர் கூறினார்.

Read More

உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஷ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடை யயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை பார்க்க வந்த பார்வையாளர்களிடம் இருந்து விசில் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. மேலும் மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டதால் பேசு பொருளானது. இது குறித்து தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் “விசில்” சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதியின் ஆட்சி நடக்கும்..! என பதிவிட்டுள்ளார்.

Read More

சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு நுழைந்துள்ளா நடிகர் விஜய். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிட உள்ளது. இதனிடையே ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்திருந்தார். 2026 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், தணிக்கை குழுவால் நிறுத்தப்பட்டு நீதிமன்றம் சென்றது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ரிலீசுக்காக போராடி வரும் ஜனநாயகன் திரைப்படம், மீண்டும் மறுதணிக்கைக்கு சென்றுள்ளது. படத்தில் பல காட்சிகள் தணிக்கை -குழுவால் நீக்கப்பட்டு, நீதிமன்றம் சென்று மறு தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் மீண்டும் மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த மாதமே படம் வெளியாக வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துள்ளனர்.

Read More

ஏதாவது ஒரு விழா, அல்லது திருமண நிகழ்வில் ஒரே மேடையில் பிரபலங்கள் சந்தித்துக் கொள்வது அரிதான விஷயம். அப்படி சமீபத்தில் நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் இளைய மகளுடைய திருமணம் நீலகிரியில் எளிமையாக நடந்தது. பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், நடிகர் தனுஷ் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. காரணம், ரீல் அம்மா, மகனாக நடித்தவர் சரண்யா, தனுஷ். தனது மகள் திருமணத்திற்கு வந்த தனுசை வெல்கம் செய்த சரண்யா, கண்டிப்பா சாப்பிட்டு போகணும் என மேடையில் கூறியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தனுஷை பாத்ததும் ப்ரியா அருள் மோகன் 😍🥰😍 pic.twitter.com/a4hoSXwosZ— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) February 9, 2026 இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், தனுஷ் உடைய மேலாளர் ஸ்ரேயாஸ், நடிகை பிரியங்கா மோகனை பார்த்ததும், கட்டியணைத்தார், அவருக்கு…

Read More

சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே யோசிக்காமல் நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன். பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா, நடிகர் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, கொடி போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருந்தார். சரண்யா – பொன்வண்ணன் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இளையமகள் சாந்தினிக்கு சமீபத்தில் நீலகிரியில் திருமணம் நடந்தது. பின்னர் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர்கள், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தனர். அதே போல முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். ஆனால் நடிகர் தனுஷ் பங்கேற்றது தான், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், மேடைக்கு தனுஷ் வந்தததும், ஆச்சரியமாக பார்த்த சரண்யா, கண்டிப்பாக சாப்பிட்டு போகணும் என கூற, நிச்சயமாக சாப்பிட்டு போகிறேன் என அவர் கூறினார். இருவரது உரையாடல்களும், பார்வையாளர்களுக்கு பார்த்தாலே புரிந்துவிடும் வகையில் இருந்தது. இதை பார்த்த பார்வையாளர்களும் புன்னகையுடன்…

Read More

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் அஜித். சமீப காலமாக கார் ரேஸ், பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சொந்தமாக ரேஸிங் கம்பெனி வைத்துள்ள அஜித், அதிக கவனத்தை இனி செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார், அடிக்க பந்தய காரில் சீறிப் பாயும் அஜித்தின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்தை பிரபலங்கள் பலர் சந்தித்து வருகின்றனர். நயன்தாரா, ஸ்ரீலீலா, அனிருத் என ஏராளமான நட்சத்திரங்கள் அவரை சந்தித்து வாழ்த்து கூறி வரும் நிலயைல், ரேஸ் டிராக்கிற்கு சென்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். #SivaKarthikeyan at Yas Marina Circuit Abu Dhabi 🔥 @Akracingoffl @Siva_Kartikeyan @SureshChandraa @ymcofficial @DoneChannel1 #AjithKumarRacing #AjithKumar #SivaKartikeyan pic.twitter.com/KWjaXO4gST— Done Channel (@DoneChannel1) February 7, 2026 துபாய் ரேஸ் டிராக்கில் நடிகர் அஜித்தை சந்தித்து…

Read More

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், காவியாவிற்கு அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, கணவர் காவியாவை கண்டித்துள்ளார். ஆனால் யாருக்கும் தெரியாமல், கள்ளக்காதலன் கார்த்திக்குடன் காவியா ஓடிப்போயுள்ளார். பின்னர், மீண்டும் அவரை அழைத்து வந்து சமரசம் செய்து செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர். ஆனால் கள்ளக்காதலனுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளாத காவியா, மீண்டும் கார்த்திக்குடன் பழகி வந்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள நகை, பணம் கொடுத்து உதவியும் செய்து வந்துள்ளார். இதை தெரிந்த செந்தில்குமார், காவியாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.…

Read More

இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என விஜய் பட நடிகை கதறி அழுத வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹோம்லியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த் என பலருடன் தமிழில் நடித்திருந்த பூமிகா, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் அவர், யுபோரியா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் விழா ஐதராபாத்தில் நடந்த போது, பங்கேற்க வந்த பூமிகா அழத் தொடங்கிவிட்டார். யுபோரியா பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்மந்தப்பட்ட உண்மைக் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து பேசத் தொடங்கிய பூமிகா கதறி அழுதார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன் என அழுதார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More