கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா உடற்பயிற்சிகள் மூலம் தனது எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். சீரான உணவு முறையை பின்பற்றி உடற்பயிற்சி செய்து 47 வயதிலும், பிட்டாக இருந்து வருகிறார் ஜோதிகா.
அந்த வகையில், எடை குறைப்புக்கு பின்னரும் தற்போது வரை தொடர்ந்து தன் ஆரோக்கியத்தை பாராமரிக்க அன்றாடம் உடற்பயிற்சி செய்து வரும் ஜோதிகா வழக்கமான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யாமல் அதனை சில சில மாற்றங்களை கொண்டு வந்து பயிற்சி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் செய்த ஒரு உடற்பயிற்சியானது இணையதளத்தில் கவனம் பெற்று வருகிறது. பிளாங்க் உடற்பயிற்சியை தற்போது அவர் செய்து வருகிறார். இதில் டம்பிள் பிளாங்க் (Dumbbell plank) என்ற மாற்றத்துடன் அவர் பயிற்சி செய்துள்ளார்.
இதன்படி, எடையொன்றினை முதுகின் நடுப்பகுதியில் வைத்துக்கொண்டு அதன் மீது உடலை அந்த பேலன்ஸில் நிற்கும்படி பயிற்சி செய்துள்ளார். இந்தவகை பிளாங்க் பயிற்சியானது பின் முதுகை வலிமையை அதிகரிப்பதுடன் ஒட்டுமொத்த வலிமையையும் அதிகரிக்க உதவும் என்று ஜோதிகாவின் பிட்னஸ் ட்ரைனர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதுகு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பரிந்துரைக்கப்படுவதில்லை எனவும், முழுக்க முழுக்க நிபுணர் கண்காணிப்பில் தான் செய்ய வேண்டும். இந்த பயிற்சி வெறும் உடற்பயிற்சி இல்லை என்றும், நம் அன்றாட வாழ்வில் ஒழுக்கத்தை வெளிப்படுத்த உதவும் விஷயம் என்றும் ஜோதிகாவின் ட்ரைனர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வதில் தான் உள்ளது. உடல் எடை குறைப்பதற்கு டயட் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு உடல் வலிமையும் முக்கியம் என்பதை ஜோதிகாவின் நம்பிக்கை இதை அவரே தன்னுடைய பேட்டிகளில் பலமுறை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

