குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்தார்.
தொடர்ந்து விஜய், அஜித், பிரசாந்த் என அப்போது பீக்கில் இருந்த நடிகர்களுடன் இணைந்து நடித்து மார்க்கெட்டை தன் வசம் வைத்தார்.
நடிகை மீனா 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உண்டு. அவரும் அம்மாவை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் விஜய்யுடன் நடித்தார்.
பின்னர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், தற்போது படிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தனி ஒரு ஆளாக தனது மகளை கவனித்து வரும் மீனா, 2வது திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவியது. ஆனால் இது குறித்து மீனா எதுவும் சொல்லவில்லை.
தற்போது 2வது திருமணம் குறித்து மீனா முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், எனக்கு 2வது திருமணம் என்ற தகவல் பரவும் போது அது காயப்படும். என்னை பற்றி வதந்தி வரும் போது முன்பு, எனக்கு ரொம்ப லேட்டாகத்தான் தெரியவரும்.
ஆனால் இப்போது அப்படி அல்ல, சோஷியல் மீடியா முழுவதும் பரவி வைரலாகி விடும். நான் ஒரு பிரபலம், அதுவும் சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா. கேட்க ஆள் இல்லை அப்படிங்கற ஒரு காரணத்துக்க இஷ்டத்துக்கு பண்றாங்க. இதெல்லாம் பார்த்தா ரொம்ப கோபம் தான் வருது என வருத்தப்பட்டார்.

