மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கோவையில் புதுதாக திறக்கபட உள்ள மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் வெள்ளலூர் U மருதாச்சலம் தலைமையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை வெள்ளலூர் L&T பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ள கடையின் முன்பாக கோசங்கள் எழுப்பிய பொதுமக்கள் தற்பொழுது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலிசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கடையை அடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செயவதாக வாக்குறுதி அளித்தனர்.

அதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது சமாதானம் செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்மணி ஒருவர் உங்க கால்ல கூட விழுகிறோம் ஐயா இந்த கடை எங்களுக்கு வேண்டாம் என்று கத்தி கதறி கெஞ்சி பேசியுள்ளார்.

