1989-ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ நடை படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாமிலி. இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு வெறும் இரண்டே வயது தான் என்றாலும் சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல் மழலை மொழியில் வசனம் பேசி அனைவரையும் இவர் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து, இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தனது மூன்று வயதில் கன்னடம் மற்றும் தெலுங்கு, தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. குறிப்பாக, தமிழில் அஞ்சலி படத்தில் நடித்ததற்காக ஷாமிலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்த படத்திற்கு பின்னர், பேபி ஷாமிலி தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார். இதன் காரணமாக, மிகவும் சிறிய வயதில் வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையும் ஷாமிலிக்கு கிடைத்தது. முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் முதல் தேசிய விருது வாங்கும்போது அவருக்கு வயது 6. அவரின் இந்த சாதனையை முறியடித்து 4 வயதில் தேசிய விருது வென்றவர் தான் தான் பேபி ஷாமிலி.

இவர் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையான ஷாமிலியின் உடன் பிறந்த சகோதரி தனது அக்கா ஷாலினியை போலவே ஷாமிலியும் குழந்தை நச்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.
குழந்தை நச்சத்திரமாகவே, 45 படங்களில் நடித்த ஷாமிலி சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்திருந்தார். 2012ல் வீரசிவாஜி என்கிற தமிழ் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்தார்.

2018 இல் தெலுங்கு படத்திலும் நடித்தது இவருக்கு இறுதி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாகவும், எந்த படத்திலும் ஷாமிலி கமிட்டாகவில்லை. நடிப்பை விட்டு ஒதுங்கி விட்ட ஷாமிலி இப்போது கண்ணாடி ஓவிய கலைஞராக இருந்து வருகிறார் என்பதும் இதற்காக பயிற்சி எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

