கதையை கேட்டு ஓகே சொன்ன ரஜினி, நடிக்க முடியாமல் போனதால் அந்த படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என இயக்குநர்கள் எத்தனையோ பேர் காத்துள்ளனர். அப்படி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, மற்றொரு வாய்ப்பையும் அந்த இயக்குநர்கள் பெற்றுள்ளனர்.
ஆனால் இப்போதைய சினிமா காலத்தில், ஏராளமான வித்தியாசமான கதைகளுடன் இளம் இயக்குநர்கள் பலர் சரியான சந்தர்ப்பம் இல்லாமல் காத்து வருகின்றனர்.
அப்படி தனது படைப்பு மூலம் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் இயக்குநம் அஸ்வத் மாரிமுத்து. ஓ மை கடவுளே என்ற விசித்தியாசமான கதையை கொடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த அவர், அடுத்ததாக டிராகன் என்ற மாபெரும் படைப்பை கொடுத்து ஜென் இசட் தலைமுறையினரை ஈர்த்துள்ளார்.
காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட் என மசாலா திரைப்படமாக கொடுத்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது டிராகன். படம் வெளியான உடனேயே ரஜினி நேரில் அழைத்து இயக்குநர் அஸ்வத்தை பாராட்டினார்.
உடனே அவருக்காக கதையும் ரெடி செய்து கூறியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இந்த வாய்ப்பு யாருக்கு தான் சீக்கிரம் கிடைக்கும் என காத்திருந்த அஸ்வத்துக்கு கொஞ்சம் சறுக்கலானது. ரஜினிக்கு அஸ்வத் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் வேறு வேறு படங்களில் ரஜினி ஒப்பந்தமானதால், தொடர்ந்து அடுத்த கட்டத்தை எட்ட முடியவில்லை. இதனால் கதையை வேறு நடிகரிடம் சொல்ல முனைப்பு காட்டினார் அஸ்வத் மாரிமுத்து.

கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டவர் நடிகர் சூர்யா. தனது 46 மற்றும் 47வது படத்தில் நடித்து கொண்டிருக்கும் சூர்யா, அடுத்த படமாக அஸ்வத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படத்தில் அயன் படத்தின் வைப் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் GOD OF LOVE திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த கையோடு, சூர்யாவுடன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

