16 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகை மீண்டும் திரையில் நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
90 மற்றும் 2000ங்களில் இளைஞர்களின் நாடித்துடிப்பாக, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டு சினிமாவில் நுழைந்த ரம்பாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது தென்னிந்திய சினிமாத்துறை.
கவர்ச்சி, குணச்சித்திர வேடம், நடிப்பு, நடனம் என அனைத்திலும் கைதேர்ந்த வித்தகியான நடிகை ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.
1993ல் உழவன் திரைப்படத்தில் அறிமுகமான அவர், கடைசியாக பெண் சிங்கம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன அவருக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தது குறிப்படத்தக்கது.

தொடை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சின்னத்திரையில் அவ்வப்போது தலை காட்டி வந்தார். விரைவில் வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் அவர், உடற் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் பயங்கர ஸ்லிம் ஆகியுள்ளார்.

புதிய கதைகளை கேட்டு தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள ரம்பாவுக்கு தற்போது 49 வயதாகிறது. மீண்டும் திரையில் ரம்பாவை காண ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளனர்.

