தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை பாராட்டியுள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தல பதிவில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இடைக்கால வேளாண் பட்ஜெட்டை மாண்புமிகு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.
தமிழின தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்கள் முதல் நவீன உலகிற்கான செயற்கை நுண்ணறிவு – அறிவுசார் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உள்ளது நமது #திராவிடமாடல் பட்ஜெட்!

ஏழை-எளிய மக்கள் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சியை தமிழ்நாட்டில் சாத்தியமாக்கி இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கும் செயல்திறனும் மக்களின் பேராதரவுடன் என்றும் தொடரும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
