ஸ்டாண்ட் அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான மெரினா படத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் இப்போது, சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்க காரணமானவர்கள் பலர் இருந்தாலும் தனுஷ் முக்கியமானவர். 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய ரோலை கொடுத்திருந்தார். அதேபோல், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் பராசக்தி படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சேயோன்’ படம் உருவாகிறது. இப்படத்தை கமலஹாசன் தயாரிக்க இயக்குனர் சிவகுமார் முருகேசன் படத்தை இயக்குகிறார்.

நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று 41-வது பிறந்தநாள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், அவரிடம் 120-கோடி ரூபாயிலிருந்து 130-கோடி வரை சொத்து மதிப்பு இருப்பதாகவும், சென்னையில் சகல வசதிகளுடன் பங்களா வைத்திருப்பதாகவும், பென்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வைத்திருப்பதாகவும், தயாரிப்பாளராகவும் கல்லா கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் 50 கோடி ரூபாயை நெருங்கி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

