மகளிர் உரிமைத் தொகை வழங்கும் போது கூடுதலாக கோடை கால சிறப்பு தொகை என ரூ.5000 அறிவித்ததார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடி வருகிறது.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மனம் திறந்து பாராட்டியிருந்தார். குறிப்பாக உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறந்த வழி என குறிப்பிட்டார்.
இதற்கு பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,கார்த்தி சிதம்பரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒரே பள்ளியில் கல்வி கற்றவர்கள்; 1990களின் தொடக்கத்திலேயே அவர்கள் கூட்டாளர்களாக இருந்தனர்.

Kanimozhi மற்றும் அவர் அதே காலப்பகுதியில் ‘கருத்து’ என்ற இயக்கத்தை தொடங்கினர். கார்த்தியின் தொழில், அரசியல், வணிகம், சித்தாந்தம் ஆகிய அனைத்தும் M. Karunanidhi குடும்பத்துடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவையாக உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

