கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாகவும், காதலிப்பதாக நீண்ட காலமாக செய்திகள் உலா வந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், வரும் 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் அரண்மனையில் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்தில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றிய புதிய தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது, திருமணத்திற்கு வருபவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மூலம் திருமணம் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக இந்த ரூல்ஸ் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இவர்களது திருமண கொண்டாட்டம் 24-ம் தேதியிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. 26-ஆம் தேதி திருமணத்தை முடித்துவிட்டு மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் தாஜ் நட்சத்திர ஹோட்டலில் தங்களது ரிசப்ஷனை வைத்திருப்பதாகவும், அதில் திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக, இவர்களது திருமண நிகழ்வுகளை வெளியிட மிகப்பெரிய தொகைக்கு Netflix நிறுவனம் அணுகிய நிலையில், அதற்கு விஜய் தேவரகொண்டா NO சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

