எந்தெந்த உணவுப் பொருட்களை எல்லாம் மீண்டும் சூடாக்கி உண்ணக்கூடாது தெரியுமா? கீழே உள்ள இந்த பட்டியலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Table of Contents
டேஸ்ட்டா சமைக்கிறமோ இல்லையோ நிச்சயம் உணவை நம்மில் பலரும் வீணாக்க மாட்டோம். வீணாக்கவே கூடாது என்ற உணர்வில் மீண்டும் சூடாக்கி பரிமாறுதல் என்பது சமைத்தல் மற்றும் பரிமாறுதலின் இன்றியமையாத விதிகளில் ஒன்று.
சுவையாக சமைக்கிறோமோ இல்லையோ நிச்சயம் உணவை வீணாக்கவே கூடாது என்ற உணர்வில் முதல் நாள் உண்ட உணவுகளை எல்லாம் வசதியாக குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து மீண்டும் மறுநாள் காலை மதிய நேரத்தில் எடுத்து சூடாக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும்.
ஆனால், சில உணவுகளை அப்படி மீண்டும் மீண்டும் சூடாக்கி உண்ணக்கூடாது என பல ஆண்டுகளாக உணவியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அந்த எச்சரிக்கை ஆலோசனைகளை நம்மில் பலர் மதிப்பதே இல்லை.
கீரை

முதல் நாள் சமைத்த கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இனிமேல் மறந்தும் கூட அப்படி சாப்பிட்டு விடாதீர்கள். கீரையை அன்றே சமைத்து அப்போதே சாப்பிட்டு முடிக்கப்பட வேண்டிய உணவு வகைகளில் ஒன்று. மீண்டும் மீண்டும் சூடாக்கி உண்ணும் போது விஷமாக மாறும் தன்மை கீரையில் உள்ளதாக உளவியல் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் அறியப்பட்டுள்ளது.
வெங்காயத்தால் மற்றும் கேரட்

கீரையை போலவே வெங்காயத்தால் மற்றும் கேரட்டிலும் கூட நைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் இவற்றை மீண்டும் மீண்டும் சூடாக்கி உண்ணும் போது அவற்றில் உள்ள நைட்ரேட்டுகள் உணவை விஷமாக மாற்றி விடுகின்றன. எனவே சூப் மற்றும் வெரைட்டி ரைஸ் சமைக்கும் போது வெங்காயத்தாள் மற்றும் கேரட்டை கூட அன்றைக்கே சாப்பிட்டு தீர்ப்பது நல்லது. மிச்சம் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உடல்நலத்திற்கு உகந்ததல்ல.
பீட்ரூட்

பீட்ரூட் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அதையே நாம் சூடாக்கி உண்ணும் போது, பீட்ரூட்டும் கூட விஷத்தன்மையை கொண்டதாக தான் மாறிவிடுகிறது. எனவே, அதையும் அளவோடு சமைத்து அன்றே சாப்பிட்டு முடிப்பது நல்லது.
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருந்தாலும், மீண்டும் மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும்போது, அவற்றில் உள்ள சத்துக்கள் வீணடிக்கப்படுவதோடு, எதிர்மறையான விளைவுகளையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. அதனால், உருளைக்கிழங்கை மறுபடியும் சூடுபத்தி உண்பதை தவிர்ப்பது நல்லது.
முட்டை

சத்துக்கள் நிறைந்தாலும் முட்டையை சமைத்த உடனே சாப்பிடுவது மட்டும் ஆரோக்கியத்துக்கான ஒரு வழி. எடுத்து வைத்து நாளை சாப்பிடலாம் என வேகவைத்த முட்டையை சேமித்து வைத்து சாப்பிட்டீர்களானால், அது ஃபுட் பாய்சன் ஆக மாறிவிடும். மேலும், வாய்வுத் தொல்லை வரை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
சிக்கன்

பலருக்கு மிக மிக பிடித்தமான உணவு வகையில், ஒன்று மாட்டிறைச்சியை காட்டிலும், அதிகமான புரதச்சத்தை சிக்கனில் இருப்பதால் சமைத்த உடனே உண்டால் அது உடல் நலனுக்கு நல்லது. மிஞ்சியதை மறுநாள் சூடாக்கி உண்ணலாம் என்று நினைத்தால் அது உங்களை மிகப்பெரிய செரிமான சிக்கலில் கொண்டு சென்று சேர்த்து விடும். எனவே, சிக்கனை பொறுத்தவரையில் ஒரே நாளில் காலையில் சமைத்து இரவுக்குள் மீண்டும் சூடாக்காமல் சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. ஒருவேளை சூடாக்கி தான் சாப்பிட வேண்டும் எனில் மிகக் குறைந்த தீயில் லேசாக சூடாக்கி சாப்பிடலாம். ஆனால், மறுநாள் வரை வைத்திருந்து சூடாக்கி என்பது முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
காளான்

ஆரோக்கியத்திற்கு உகந்த சுவையான உணவு காளான். இது சமைப்பதற்கு மிக எளிதான உணவு வகைகளை ஒன்று. சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள் என மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் அது இதய நோய் முதல் கடுமையான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். ஒருவேளை காலையில் சமைத்த காளான் இரவில் சாப்பிட வேண்டும் என்றால் கூட அதை சூடாக்காமல் அப்படியே சாப்பிடுவது உகந்தது. சூடாக்கும் பொது சுவையான உணவு என நினைத்து நாம் உண்பது விஷமாகிவிடும் உபத்திரம் அளிக்கும் பொருளாக மாறிவிடும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

