கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாகவும், காதலிப்பதாக நீண்ட காலமாக செய்திகள் உலா வந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், வரும் 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் அரண்மனையில் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்தில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பத்திரிகை ஒன்று வெளியாகி உள்ளது. இது விஜய் தேவர்கொண்டா தரப்பிலிருந்து வைக்கப்படும் பத்திரிக்கை என கூறப்படுகிறது.

சிலர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வாக இருக்கும் என்றும், அதில் நீங்கள் வந்திருந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் வரும் மார்ச் 4-ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெறும் என்றும் 7:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹைதராபாத்தில், உள்ள பஞ்சாரா ஹில்ஸில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மைதானா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

