தமிழ் திரை உலகில் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் ரமேஷ். இவர் ஆர்பி சௌத்ரியின் மூன்றாவது மகன். இவர் முதன்முதலாக அஜித்தின் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்து வந்தாலும், இவருக்கான வரவேற்பு சரியாக கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜித்தன் ரமேஷ் பேசுகையில், படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் யார் என்ன கதை என எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்தடுத்த பல படங்களில் நடித்ததுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், அதுதான் தன்னுடைய மார்க்கெட் பாதாளத்திற்கு போனதுக்கான காரணமாகவும் அமைந்தது என்று தெரிவித்தார்.

மேலும், அந்த பேட்டியில் ஜித்தன் ரமேஷ் தனது மகள் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் என் மகள் என்றால் எனக்கு உயிர் மகள்தான் பிறக்க வேண்டும் என நான் மிகவும் ஆசைப்பட்டேன் என் மகளுக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது அவள் மாடியில் இருந்து விழுந்து விட்டார்.

விழுந்ததில் தலையில் அடிபட்டு முகத்தில் அடிபட்டு ரத்தமாக கொட்டியது மூன்று நாள் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கி மருத்துவமனை மருத்துவமனையாக சென்றோம். அந்த சம்பவத்தை என்னால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. என் வாழ்வில் அந்த சம்பவத்தை மறக்கவும் முடியவில்லை. மறக்க வேண்டும் என நினைக்கும் ஒரே விஷயம் இதுதான் என ஜித்தன் ரமேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

