கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியல் அடங்கிய திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிட்டார்.
அதில் திமுக எம்பி டிஆர் பாலு, அவரது மகனும் அமைச்சருமான டிஆர்பி ராஜா உட்பட அவரது குடும்பத்தினரக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போட்டார். இந்த வழக்கில் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலையிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலை மற்றும் டிஆர் பாலு ஆஜராகியிருந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு, கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது டி ஆர் பாலு 10 கப்பல்களை சொந்தமாக வாங்கியதாக மு.க அழகிரி கரத்து தெரிவித்தார், அது குறித்து செய்தித்தாள்கிளில் ஞாபகம் உள்ளதாஈ என கேள்வி எழுப்பப்பட்டது.
அண்ணாமலையின் குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்த டிஆர் பாலு, மத்திய அமைச்சராக இருந்த போது நான் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தி 10 கப்பல்கள் வாங்கியதாக விஷயம் தெரியாமல் அழகிரி பேசியிருந்தார். அதை ஆதாரமாக வைத்து அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

நான் மத்திய அமைச்சராக இருந்த போது 2 கப்பல்களை தான் வங்கினேன், அண்ணாமலையின் குற்றச்சாட்டு அவதூறானது என வாதத்தை முன்வைத்தார்
அப்போது அழகிரி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த டிஆர்பாலு, அரைவேக்காட்டுத்தனமாக புரிந்து கொண்டு அழகிரி பேட்டியளித்தார். அதனால் நான் அவதூறு வழக்கு தொடரவில்லை என கூறினார்.

