தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் இதற்காக படு தீவிரமாக பயணியாற்றி வருகிறது.
திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மறுபக்கம் அதிமுக கூட்டணி இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவுடன் கூடட்ணி அமைத்துள்ளது.
அதிமுக பொறுத்தவரை பாஜக, அமமுக, அன்புமணியின் பாமக உட்பட ஏராளமான கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணி இதுவரை உடையாமல் அப்படியே உள்ளது.
இதனிடையே நாம் தமிழர் கட்சி, தவெக கட்சி தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக, இதுவரை சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் ஜக்கி வாசுதேவிடம் ஆசி பெற்றனர்.
அப்போது அருகில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த இருந்தார். மேலும் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார். உடனே பிரேமலதாவும் ஆசி வாங்கினார்.

இதன் மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என சொல்லாமல் அறிவித்துள்ளாரோ என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இன்றும் கோவையில் தான் பிரேமலதா தங்கி உள்ளார் என்பதால் அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது.

