சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய விஜய், அண்ணா வைத்திருந்த திமுகவை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விமர்சித்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், முதலில் விஜய் வெளியே வர வேண்டும், நடிகையின் வீட்டை விட்டு வந்து பேச வேண்டும் என கூறினார். இதற்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் நயினார் நாகேந்திரன் கண்ணியத்தை தவறவிட்டுள்ளார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் விமர்னங்களை முன் வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.
அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?
4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?
முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.

