நடிகை கனகாவை கங்கை அமரன் உருவ கேலி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா தவறவிட்ட நடிகை கனகா. இவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கனகாவின் நடிப்பு பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது.
முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை பயன்படுத்திக் கொண்டு தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார் கனகா. அப்படிப்பட்ட சூழலில் தான் அவர் தாய் தேவிகாவின் மரணம் கனகாவை நிலைகுலைய செய்தது.

அதேபோல், கனக ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை அவர் சரியாக புரிந்து கொள்ளாமல் கனகாவுக்கு பிரச்சனைகள் கொடுத்ததாகவும், ஒரு தகவல் உலா வந்தது. மேலும், கனகாவின் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை அவரால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என கனகாவை தீராத மன உளைச்சலில் தள்ளி விட்டதாக சிலர் கூறுவது உண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கனகா சினிமாவில் இருந்து ஒதுங்கி அவரை அவரே தனிமைப்படுத்தி கொண்டார். பல வருடங்களாக கனகாவுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில், நடிகை குட்டி பத்மினி கனகாவை நேரில் சந்தித்தார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டானது.

முக்கியமாக கனக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை கூடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடையவும் செய்தார். கனகாவை பலரும் பேட்டி எடுக்க முயன்ற நிலையில், கனகா பேட்டி கொடுக்க முன்வரவில்லை.
இந்நிலையில், கனகாவை அறிமுகம் செய்து வைத்த கங்கை அமரன் பேசி இருக்கும் விஷயம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரனிடம் கரகாட்டக்காரன் 2 படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், இரண்டாம் பாகம் எடுத்ததால் இதைவிட முதல் பாகம் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிடுவார்கள். அந்த படத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க முடியாது. கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை. செந்தில் படங்களில் நடிப்பதில்லை. ராமராஜன் உருவம் மாறி போய்விட்டார். கனகா குண்டாகிவிட்டார்.

இப்போது, அவர்களை வைத்து எப்படி இரண்டாம் பாகத்தை எடுக்க முடியும் என்று கூறியிருந்தார். அவர் பேசியது வைரலான நிலையில், ஏன் யா ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது … என்ன சார் இதெல்லாம் என்று ரசிகர்கள் உருவ கேலி குறித்து கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

