சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 12% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு அதில் திமுக வெல்லும் என வெளியாகியுள்ளது.
திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் மெத்தனமாக இந்த கட்சி இருக்காது, தொடர்ந்து உழைத்து கொண்டே இருப்போம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் ஒத்துவராது, திமுக காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். இதில் எந்த குழப்பமும் இல்லை. சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். எனக்கு ராகுல் காந்தி சகோதரரை போன்றவர், அவருக்கும் அப்படித்தான். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைத்து வரும் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் முதலமைச்சரின் பேச்சால் அப்செட்டில் உள்ளனர்.

