ஆட்டோவில் பயணம் செய்வது சிலருக்கு அலாதியான இன்பம் என்றே சொல்லலாம். ஒரு சில ஓட்டுநர்கள் பயணிகளை நன்கு மதிப்பர். ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்கள் வாகனங்களை அலங்கரித்து பயணிகளை கவருவர்.
ஆனால் தனது ஆட்டோவில் சிறுமியை உறங்க வைத்து சவாரி செய்து வருகிறார் ஓட்டுநர் ஒருவர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஆட்டோவில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ பின் இருக்கையில் சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கார். உடனே ஓட்டுநர் சிறுமியை பற்றி கேட்க, ஓட்டுநர் சொன்ன வார்த்தை நெகிழ வைத்துள்ளது.
ஓட்டுநர் கூறியது, அது என் மகள் ஆயுஷி, என் மனைவி இறந்துவிட்டதால், மகளை தனியாக கவனித்து வருகிறேன். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத சூழல் உள்ளதால், தினமும் சவாரிக்கு செல்லும் போது, மகளை பின் இருக்கையில் அமர்த்திவிடுவேன்.
அவளும் எந்த கவலையும் இன்றி அதில் அம்ர்ந்து கொண்டும் தூங்கிக் கொண்டும் வருவாள் என கண்ணீருடன் பேசினார். ஒற்றை பெற்றோருக்கு ஏற்படும் சிக்கல்களை இந்த ஒரு வீடியோ பிரதிப்பலித்துள்ளது.
உடனே அந்த பயணி, இருவரையும் அழைத்து சிற்றுண்டி வாங்கி தந்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட சிறுமி, புன்னகையை வெளிப்படுத்துவார். இதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

