பல படங்களில் குத்தாட்டம் போடவே ஒரு பாடலுக்கு நடித்து வந்த நடிகை தற்போது படுத்த படுக்கையாகி உள்ளார்.
நடிகை முமைத்கான, என் பேரு மீனாகுமாரி பாடலில் செம ஆட்டத்தை போட்டிருப்பார். அந்த பாட்டுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள்.
வேட்டையாடு விளையாடு படத்தில் நெருப்பே பாடலுக்கு ஆடி பலரது கவனங்களை ஈர்த்த அவர், தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கமிட் ஆனார்.
ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதை வாடிக்கையாக கொண்ட முமைத்கான், எப்பேர்ப்பட்ட நடனத்தையும் அசால்டாக ஆடி விடுவார். போக்கிரி படத்தில் என் செல்ல பேரு, வில்லு படத்தில் டாடி மம்மி என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மலையூர் மம்பட்டியான், மருதமலை போன்ற படங்களல் கௌரவ தோற்றங்களில் நடித்தார். பல வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் தலையில் அடிப்பட்டது. அதனால் 15 நாட்கள் கோமாவில் இருந்தேன்.
மூளைக்கு செல்லும் 5 நரம்புகள் வெடித்து சிதறியதால், படுத்த படுக்கையாக இருந்தேன். 7 ஆண்டுகள் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நான் பழையபடி வேலை செய்ய முடியாது.
7 ஆண்டுகள் நான் ஓய்வில் உள்ளேன். இந்த நாட்களில் நான் யார் என என்னை அறிந்தேன், முமைத்கானாக அழகு பார்த்த கடவுள் அதற்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

